பதிவு செய்த நாள்
19
நவ
2012
10:11
கம்பம்: குமுளி வழியாக, சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகரித்து வருகின்றன.அய்யப்ப பக்தர்கள் சபரிமலை செல்வதற்கு செங்கோட்டை, குமுளி சாலைகளே பிரதான பாதைகளாகும். குமுளி வழியாகத் தான் பெரும்பாலான பக்தர்கள் பயணம் செய்கின்றனர். சபரிமலைக்கு, தை மாதம் தான், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் செல்வர்.இந்த ஆண்டு, கார்த்திகை 1ம் தேதி முதல், சபரிமலைக்கு கார், பஸ்களில் செல்லும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில், அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகளவு செல்கின்றன. இப்போதே குமுளி மலைப்பாதையில் நெருக்கடி நிலை உருவாகி உள்ளது.கம்பம் போலீசார் கூறுகையில், ""இந்த ஆண்டு, கார்த்திகை முதல் நாளே, அதிக வாகனங்கள் சபரிமலைக்கு சென்றன. தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனவே, குமுளி சாலையை ஒரு வழி பாதையாக மாற்றுவது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் கம்பமெட்டு சாலையில் சபரிமலை வாகனங்களை திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.