Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் கடும் நெருக்கடி ... திருமலை கோவிலுக்கு எம்.பி., 100 ஏக்கர் நிலம் நன்கொடை! திருமலை கோவிலுக்கு எம்.பி., 100 ஏக்கர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் யானைகளுக்கு 48 நாள் புத்துணர்வு முகாம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 நவ
2012
11:11

மேட்டுப்பாளையம்: யானைகள் நல வாழ்வு புத்துணர்வு முகாம், மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் வரும், 26ல் துவங்கி, ஜன., 12ம் தேதி வரை, 48 நாட்கள் நடக்கிறது; 40 யானைகள் பங்கேற்கின்றன.மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோவில் அருகில், பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில், தமிழக கோவில் யானைகளுக்கான நல வாழ்வு புத்துணர்வு முகாம் நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணி நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் தனபால், முகாம் நடக்கும் இடத்தை நேற்று பார்வையிட்டார். யானைகள் மற்றும் பாகன்கள், அலுவலக ஊழியர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, யானைகளுக்கான சிறப்பு புத்துணர்வு முகாம், இப்பகுதியில் நான்கு ஏக்கர் பரப்பில் நடத்தப்படுகிறது. கடந்தாண்டுகளில் முதுமலை தெப்பக்காட்டில் நடந்த முகாம்களில், யானைகளை லாரிகளில் கொண்டு செல்லவும், ஏற்றி இறக்குவதில் உள்ள சிரமம் மற்றும் சட்டப் பிரச்னைகள் காரணமாகவும், இவ்வாண்டு, தேக்கம்பட்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆரம்ப கட்ட பணி நடக்கிறது.

இம்முகாமில், 33 கோவில்களில் இருந்து 35 யானைகளும், ஐந்து திருமடங்களில் இருந்து 10 யானைகளுமாக, 45 யானைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், வர மறுக்கும் யானைகள், நோய் தாக்குதலுக்குள்ளான யானைகள் தவிர்த்து, 40 யானைகள் முகாமில் பங்கேற்கும் என எதிர்பார்க்கிறோம்.யானைகளுக்கு குதூகலத்தை ஏற்படுத்தும் விதத்தில் இப்பகுதியில் தட்பவெப்ப நிலை நிலவுகிறது. பவானி ஆற்றின் கரையோரத்தில் இந்த இடம் அமைந்துள்ளதால், தண்ணீர் பிரச்னை இல்லை. ஆற்றில் யானைகள் குளிக்க, ஐந்து இடங்களும், பாகன்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் குளிக்க, ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது; போதுமான பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மாதம் 26ம் தேதி முதல், ஜன., 12ம் தேதி வரை, 48 நாட்கள் நடக்கும் இம்முகாமுக்கு, 75 லட்சம் ரூபாய் அரசு மானியமாக வழங்குகிறது. முகாமில் பங்கேற்கும் யானை ஒன்றுக்கு, தீவனம், மருந்து, மாத்திரைகள் உட்பட 1.66 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உதவியாக, வனத் துறை, பொதுப்பணித் துறை, கால்நடைத் துறை, மருத்துவத் துறையினர் செயல்படுவர். இந்து சமய அறநிலையத் துறை இணை கமிஷனர் (கோவை) புகழேந்திரன், இம்முகாமின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.இவ்வாறு தனபால் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar