பதிவு செய்த நாள்
24
நவ
2012
10:11
பழநி: பழநிகோயில் உண்டியல் வசூல் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாயை எட்டியது. கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. ரொக்கம் ஒரு கோடியே 3 லட்சத்து 71 ஆயிரத்து 370 ரூபாய், தங்கம் 651 கிராம், வெள்ளி 4 ஆயிரத்து 70 கிராம் இருந்தன. வெளிநாடுகளின் கரன்சி 403, தங்கத்தினாலான வேல், திருமாங்கல்யம், மோதிரம், செயின், வெள்ளியிலான வேல், ஆள்ரூபம், வீடு, கொலுசு உட்பட ஏராளமானவை காணிக்கையாக செலுத்தபட்டிருந்தது. இவ்வசூல் 25 நாட்களில் கிடைத்தது. திறப்பின்போது, கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் இருந்தனர்.