பதிவு செய்த நாள்
04
டிச
2012
10:12
சென்னை: மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவிலுக்கு, கடந்த பல ஆண்டுகளாக வரவேண்டிய, 1.45 கோடி ரூபாய் வாடகை பாக்கி, கோவில் நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கையால், வசூலாகியுள்ளது. மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமாக, மயிலாப்பூர், லஸ் சர்ச் சாலையில், 23 கிரவுண்ட், 2,385 சதுரடி பரப்பளவுள்ள, மனை உள்ளது. இந்த மனை, மயிலாப்பூர் கிளப் நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கடந்த, 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வாடகை தொகை, நீண்ட காலமாக செலுத்தப்படாமல், நிலுவையில் இருந்தது.கோவில் நிர்வாகத்தின் முயற்சியால், நிலுவை தொகையில் ஒரு பகுதியான, 1.43 கோடி ரூபாயை, ஜூலை 1ம் தேதி, மயிலாப்பூர் கிளப் நிறுவனம் கோவிலுக்கு செலுத்தியது. கோவில் நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியதை தொடர்ந்து, நவம்பர், 28ம் தேதி, மீதம் செலுத்தப்பட வேண்டிய வாடகை பாக்கியை, மயிலாப்பூர் கிளப் வழங்கியது. அந்நிறுவனத்தின் சார்பில், செயலர் ரவி மற்றும், சட்ட ஆலோசகர் சதீஷ் பராசரன் ஆகியோர், நிலுவை தொகையான, 1.45 கோடி ரூபாய்க்கான காசோலையை, கோவில் தக்கார் விஜயகுமார் ரெட்டியிடம் வழங்கினர். உடன், கோவில் துணை ஆணையர் காவேரி இருந்தார்.