பதிவு செய்த நாள்
14
டிச
2012
12:12
கோத்தகிரி: கோத்தகிரிசாந்தி ஆஸ்ரமத்தில், நேற்று முன்தினம் உலக அமைதிக்கான சர்வமத சிறப்பு பிரார்த்தனை நடந்தது. விஸ்வ சாந்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் போஜராஜன் வரவேற்றார். இதில், இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்துவ பிரதிநிதிகள் சார்பில், சுவாமி புத்சேஷ நந்தா, பாபு ஹாஜி மற்றும் ரெவரென்ட் கிறிஸ்டோபர் ஆகியோர் கலந்துக் கொண்டு,"கொடுத்து உதவும் மனப்பான்மையின் அவசியம், குறித்து விளக்கினர். பள்ளி இசை ஆசிரியர் பகவத் சைதன்யா தலைமையில், பள்ளி மாணவ, மாணவியரின் சர்வ மத பஜனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி முதல்வர் சண்முகம் தலைமையில், ஆசிரியர், ஆசிரியைகள் செய்திருந்தனர்.
* கோத்தகிரி கேர்கம்பை ஹில்போர்ட் மெட்ரிக் பள்ளி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், உலக அமைதி நாள் நிகழ்ச்சி நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் லட்சுமிநாராயணன் மற்றும் சமூக சேவகர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊட்டி பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தை சேர்ந்த சசிகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். பள்ளி துணை முதல்வர் சுரேஷ் நன்றி கூறினார்.