Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பம்: ... பழநியில் குவியும் ஐயப்ப பக்தர்கள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மார்கழியை வரவேற்று வண்ணக்கோலம்: சுத்தமான காற்றை சுவாசிக்கும் காலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 டிச
2012
11:12

செங்குன்றம்: அதிகாலையில் தெருக்களை அலங்கரித்த வண்ண கோலங்கள், பஜனை முழக்கங்கள் என, இந்தாண்டு உற்சாகமாக மார்கழி மாதம் துவங்கி விட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், தெருக்களில் வெண்ணிற அரிசி மாவு உட்பட பல்வேறு வண்ணங்களில், அழகிய கோலங்கள் இடப்படுகின்றன. செங்குன்றம் துவங்கி, தாம்பரம் வரையிலான நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் வண்ணக் கோலங்களும், பஜனை முழக்கங்களுமாக மார்கழி களைகட்டியுள்ளது.இது குறித்து ஜோதிடர் ரவிக்குமார் கூறியதாவது:மார்கழியில் அதிகாலையில் வீசும் குளிர்ந்த சுத்தமான காற்று சுவாசத்திற்கு ஏற்றது. இறைவன் மீதான பஜனை பாடல்களை பாடவும், கேட்கவும், மாசில்லாத இயற்கை காற்றை சுவாசிக்கவும் கிடைக்கும் அரிய வாய்ப்பு, இந்த மாதத்தில் தான் வாய்க்கிறது.மார்கழி கோலத்தின் சிறப்பு, சாணம் தெளித்து கோலமிட்டு அதன் மேல் பூசணி பூ வைப்பது தான். அதனால், கிருமிகள் அகன்று நோய் தொற்று பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன. ஆனால், இன்று ஒரு சில கிராமங்களில் மட்டுமே, பூசணி பூ கோலத்தை பார்க்க முடிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.பெரும்பாலான பெண்கள், அதிகாலையில் நீடிக்கும் அடர்த்தியான பனி பொழிவு மற்றும் மர்ம நபர்களின் நகை பறிப்பு காரணமாக, முன் இரவிலேயே கோலம் போட்டு விடுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar