பதிவு செய்த நாள்
19
டிச
2012
11:12
பழநி: பழநியில் ஐயப்பன் பக்தர் சீசனை தொடர்ந்து, பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அடிப்படை வசதிகளின்றி பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.பழநி கோயிலுக்கு, மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மார்கழி என்பதால் அதிகாலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்படுகிறது. இதனால் அடிவாரம், கிரிவீதி, ரோப்கார் ஸ்டேஷன், வின்ச் ஸ்டேஷன் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம். பிரச்னைகள்: பக்தர்களுக்கு கழிப்பறை, குடிநீர் வசதி மிகவும் குறைவு. சரவணப்பொய்கையில் "இலவச கட்டணம் என போர்டு இல்லாததால், பக்தர்களிடம், குளிப்பதற்கு ரூ.5 முதல் 10 வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். * மலைக்கோயில் செல்லும் பக்தர்களை திருஆவினன்குடி அருகே வழிமறித்து, கோயிலுக்கு அழைத்து செல்ல ரூ.500 முதல் 1000 வரை இடைத்தரகர்கள் பேரம் பேசுகின்றனர். "வேண்டாம் என்றால், பக்தர்களை கடுமையான வார்த்தைகளால் "அர்ச்சனை" செய்கின்றனர்.* தேங்காய், பழங்களை கூடுதலாக விலைக்கு விற்கின்றனர். * அடிவாரம், சன்னதி வீதி, திருஆவினன்குடி கோயில் பாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. பக்தர்கள் இந்த ரோட்டில் நடப்பதே சிரமமாக உள்ளன.பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர நகராட்சி,தேவஸ்தானத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.