Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
தீர்த்தீஸ்வரர் கோவிலில் அய்யப்ப விளக்கு பூஜை
டிசம்பர் 19,2012
அ-
+

திருவள்ளூர் : தீர்த்தீஸ்வரர் கோவிலில், அய்யப்ப திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் சுவாமி கோவிலில் உள்ளஅய்யப்ப சுவாமிக்கு, 42ம் ஆண்டு திருவிளக்கு பூஜை, கடந்த இரு தினங்களாக நடந்தது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கின. மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலை அய்யப்ப சுவாமிக்கு அன்னாபி ஷேகம் நடைபெற்றது.திங்கட்கிழமை திருவிளக்குப் பூஜை நடந்தது. விசேஷ அலங்காரத்துடன் அய்யப்ப சுவாமியின் திருவீதி உலா நடைபெற்றது.மேலும், மகா தீபாராதனை, வாண வேடிக்கை, பஞ்சவாத்தியம், காவடி, கரகாட்டம், தாயம்பகா, உடுக்கை, திரி உழிச்சல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகள் பங்கேற்ற தாலதட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அய்யப்பனுக்கு, 150 கிலோ எடை உள்ள சாமந்திப் பூவில் கட்டப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், ஸ்ரீ அய்யப்பா திருப்பணி சேவா சங்கம் சார்பில் செய்யப்பட்டன.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.