திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவில் சுமார் 6 லட்சம் பேர் திருமலையில் குவிவார்கள் என கோயில் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. இவர்களில் பாதிக்கும் அதிகமானோர் அலிபிரியிலிருந்து பாதயாத்திரையாக மலைக்கோவிலை அடைவார்கள் என கூறப்படுகிறது. இதையொட்டி, திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.