Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
டிசம்பர் 24,2012
அ-
+
Temple images

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு மார்கழி மாதத்தையொட்டி வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வைணவ திருத்தலங்களுள் முக்கியமானதாக விளங்குகிறது. தற்போது மார்கழி மாத பகல் பத்து, ராப்பத்து உற்சவங்கள் நடப்பதால் தினமும் அதிகாலை 4 மணி முதல் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது சபரி மலை சீசன் என்பதால் ராஜபாளையம், செங்கோட்டை வழியாக சபரி மலை சென்று வரும் பக்தர்களும் அதிகளவில் கோயிலுக்கு வருகை தருகின்றனர். தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாகவுள்ளது. நகருக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ரோட்டில் நிறுத்தும் வாகனங்கள், ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. போக்குவத்தை ஒழுங்குபடுத்த போதுமான போலீசார் இல்லை. பக்தர்கள் வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்துகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.