பதிவு செய்த நாள்
24
டிச
2012
10:12
ஈரோடு: ஈரோடு, வீரப்பன் சத்திரம் மாரியம்மன் கோவில் பண்டிகை முன்னிட்டு, நேற்று பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து சென்றனர்.ஈரோடு, வீரப்பன் சத்திரம் மாரியம்மன் கோவில், மாரியம்மன் தீர்த்தக்குழு நண்பர்கள் சார்பில், ஒன்பதாம் ஆண்டு தீர்த்த விழா நடக்கிறது. 18ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன், கம்பம் நடப்பட்டது. நேற்று நடந்த தீர்த்த விழாவில், பக்தர்கள் அதிகாலை, 5 மணியளவில். காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். நண்பகல், 12 மணிக்கு தண்ணீர் டேங்க் மைதானத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை கோவில் தீர்த்தமும், 26ம் தேதி மாவிளக்கு பூஜையும், பொங்கல் விழா நடக்கிறது. 27ம் தேதி கம்பம் பிடுங்குதல், அம்மனுக்கு மல் பல்லக்கு ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 28ம் தேதி மாலை மறு பூஜை நடைபெற உள்ளது.