கிறிஸ்துமஸ்விழா: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2012 10:12
சென்னை: கிறிஸ்து பிறப்பான இன்றைய தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் ஆக கொண்டாடப்படுகிறது. இதனைமுன்னிட்டு பல்வேறு நாட்டு தலைவர்களும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பெத்தலேகமில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதே போல் வாடிகன் நகரில் குழுமியிருந்த பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட போப் 16 ஆம் பெனடிக்ட் கிறிஸ்துமஸ் நற்செய்தியை வழங்கினார். மேலும் தமிழகத்தி்ல் பெரிய நகரங்களான சென்னை, மதுரை கோவை உட்பட பல்வேறு நகரங்கள் மட்டுமல்லாது அனைத்து நகரங்களிலும் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற நள்ளிரவு பிரார்த்தனையில் ஈடுபட்டு மக்கள் கிறிஸ்துமஸ் தினத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.