புதுச்சேரி: ஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் கடையநல்லூர் ராஜகோபால் பாகவதரின், நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது.லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு 24ம் @ததி மாலை 6 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம், திருவாராதனம் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணிக்கு, சொர்க்க வாசல் திறப்பும், கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலாவும் நடந்தது. விழாவையொட்டி இரவு 7 மணிக்கு கடைய நல்லூர் ராஜகோபால் பாகவதர் குழுவினரின் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது. லாஸ்பேட்டை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்தனர்.