பதிவு செய்த நாள்
26
டிச
2012
11:12
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள, தர்மசாஸ்தா ஆலயத்தில், ஐயப்ப சுவாமிக்கும், சவுராஷ்ட்ர குலகன்னி புஷ்கலாதேவிக்கும் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.இக்கோயிலில் உள்ள பிரதான சன்னிதியில் ஐயப்பனும், மற்றொரு சன்னிதியில் புஷ்கலாதேவியும் வீற்றிருக்கின்றனர். கேரளா, ஆரியங்காவிற்கு அடுத்ததாக, பரமக்குடியில் ஐயப்பனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இதன்படி, இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு, நிச்சயதார்த்த நிகழ்ச்சியும், நேற்று காலை 9 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றல் உள்ளிட்ட வைபவங்களும் நடந்தது. காலை 10.30 க்கு, திருக்கல்யாணம் நடந்தது. மதியம் அன்னதானம், இரவு 7 மணிக்கு திருவீதி உலா நடைபெற்றன. சுந்தரராஜப் பெருமாள் கோயில் டிரஸ்டிகள், தர்மசாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள், தர்மியா, உமாயி, நம்பி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று(டிச., 26) காலை 8 மணிக்கு 108 சங்காபிஷேகம், மாலை 6 மணிக்கு ஐயப்பன் வீதியுலா நடைபெறுகிறது.