பதிவு செய்த நாள்
26
டிச
2012
11:12
தென்காசி: தென்காசி வட்டார கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. தென்காசி மையப்பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதர் ந்நதிக்கு நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு பால், இளநீர், சந்தனம், பன்னீர், திரவியம், தயிர், பஞ்சாமிர்தம், நெய் உட்பட நறுமண பொருட்கள் அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.தென்காசி மேலசங்கரன்கோவில், பொருந்திநின்ற பெருமாள் கோயில், கீழ சங்கரன்கோவில், கீழப்பாவூர் நரசிம்மர் கோயில், இலஞ்சி குமாரர்கோயில், குற்றாலம் குற்றாலநாதர் கோயில், செங்கோட்டை பெருமாள், சிவன், நித்யகல்யாணி அம்மன் கோயில், புளியரை தெட்சணாமூர்த்தி கோயில் இலுத்தூர் சிவன், பெருமாள் கோயில், ஆய்க்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோயில் உட்பட சுற்றுவட்டார பகுதி கோயில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.