பதிவு செய்த நாள்
27
டிச
2012
11:12
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களில் ஒன்று, ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவில். இங்கு ஆவுடையார் மாணிக்கவாசகராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழியில் திருவாதிரை திருவிழாவும், ஆனியில் திருமஞ்சனத் திருவிழாவும் நடப்பது வழக்கம்.இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா கடந்த, 18ம் தேதி திருக்கொடியேற்றுடன் துவங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக ÷நற்று தேர் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 5 மணிக்கு மூலவர் ஆவுடையார் மற்றும் யோகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்ததுகாலை 9.30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. திருத்தேரை திருவாவடுதுறை ஆதீன நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், முத்துகுமார தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து துவக்கி வைக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். மாடவீதிகளில் வலம் வந்த தேர், 12.30 மணிக்கு நிலைக்கு வந்தது. திருத்தேரில் சர்வ அலங்காரத்தில் யோகாம்பாள் சமேதராக ஆவுடையார் மற்றும் மாணிக்க வாசகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.