கூடலூர் : கூடலூர் நம்பாலகோட்டை வேட்டைகொருமகன் கோவிலில் ஐயப்பன் மண்டல பூஜை சிறப்பாக நடந்தது.கூடலூர் நம்பாலகோட்டை வேட்டைகொருமகன் கோவிலில் ஐயப்பன் மண்டல பூஜை நடந்தது. காலை 4:30 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து அபிஷேகம், அலங்கார, சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 10:30 மணிக்கு மகாபூஜை;11:00 மணிக்கு சிவன் மலையில் சிறப்பு பூஜை நடந்தது. மாலை 3:00 மணிக்கு சிறப்பு பூஜைகளும், தீபாரதனையும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு கூடலூர் விநாயகர் கோவிலிலிருந்து ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை கூடலூர் ஆர்.டி.ஓ., ஆதிமூலம், டி.எஸ்.பி., திருமேனி ஆகியோர் துவக்கி வைத்தனர். 9:30 மணிக்கு பஐனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழு தலைவர் அனந்தசையணம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.