Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் புராணம் பகுதி-7 விநாயகர் புராணம் பகுதி-9 விநாயகர் புராணம் பகுதி-9
முதல் பக்கம் » விநாயகர் புராணம்
விநாயகர் புராணம் பகுதி-8
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 பிப்
2011
02:02

சிவபெருமானிடம் சென்ற அவர், மைத்துனரே! சக்தியின் இந்த சாபம் எனக்கு எப்போது தீரும்? என்று கேட்டார். அதற்கு சிவன், விஷ்ணுவே! நீர் வடதீவு என்னுமிடத்திற்கு சென்று இதே வடிவில் வசித்து வாரும். கணபதியின் மகிமையை உலகறியச் செய்ய இந்த வடிவத்துடன் நீர் எனக்கு உதவ வேண்டும். கணபதியைக் கொண்டு கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ய இருக்கிறேன். அவன் அதை முடித்து விட்டு, வெற்றித்திருமகனாக நீர் பாம்பாக கிடக்கும் பாதையில் வருவான். அவனது திருவடி அந்தத்தீவில் பட்டதுமே சுய உருவை அடைந்து விடுவீர். மேலும், இந்த சம்பவம் உலகோருக்கு ஒரு பாடமாகவும் அமையட்டும். எந்தச்சூழலிலும் தவறான தீர்ப்பு சொல்லவே கூடாது. நடுநிலை தவறக்கூடாது. தவறான தீர்ப்பு சொல்பவர்கள் விலங்காகப் பிறந்து துன்பமடைவார்கள், என்றார். உலகிற்கு ஒரு பாடத்தைக் கற்பித்த மகிழ்ச்சியுடன் விஷ்ணு வடதீவிற்குப் பாம்பு வடிவிலேயே ஊர்ந்து  சென்றார். இந்த சமயத்தில் கஜமுகாசுரனின் அட்டகாசம் அதிகரித்தது. இந்திரன் முதலான தேவர்களையும், நவக்கிரகங்களையும் அவன் ஆட்டி வைத்தான். அவர்கள் தினமும் இருட்டறையில் அடைக்கப்பட்டு தேவையில்லாமல் சித்ரவதை செய்யப்பட்டனர். ஒருமுறை அவர்கள் அனைவரையும், மொத்தமாக ஒரு மைதானத்தில் நிறுத்திய யானை முகம் கொண்ட கஜமுகாசுரன், சுக்ராச்சாரியாரையும், முன்னாள் அசுரத்தலைவனும் தற்போது தனக்கு அமைச்சராக இருப்பவனுமான அசுரேந்திரன் ஆகியோரையும், அசுரத்தளபதிகள், அசுரமக்கள் அனைவரையும் வரவழைத்தான். அசரகுல திலகங்களே! தேவர்கள் நம்மை வென்று விடலாம் எனக்கருதினார்கள். ஆனால், நான் சிவனாரிடம், அவரது சக்தியைத் தவிர வேறு எதனாலும் அழியமாட்டேன் என்ற வரம் பெற்றிருக்கிறேன். எனவே, இந்தத் தேவர்கள் என்னை எதுவும் செய்ய இயலாது. நம்மை பல சமயங்களில் இவர்கள் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

நம்மை வென்று விட்டதாக மார்தட்டியுள்ளனர். இப்படிப்பட்ட கொடியவர்கள் இப்போது நம்மை வணங்கி நிற்கின்றனர். ஆனால், வணக்கத்திலும் இப்போது ஒரு வித்தியாசத்தைக் காணப்போகிறீர்கள். இதோ! இவர்கள் அனைவரும் தங்கள் காதுகளை மாறுகைகளால் பிடித்துக் கொள்ள வேண்டும். உட்கார்ந்து உட்கார்ந்து எழ வேண்டும். தோப்புக்கர்ண வழிபாடு என்பது இதற்குப் பெயர். இப்போது தேவர்கள் என் முன்னால் தோப்புக்கர்ணம் போடப் போகிறார்கள். நீங்கள் பார்த்து ரசித்து கைத்தட்டி மகிழுங்கள், என்றான். பின்னர் தேவர்களை நோக்கி உம் என்று அதட்டினானோ இல்லையோ, நடுநடுங்கிப் போன தேவர்கள் 108 முறை தோப்புக்கர்ணம் போட்டு, கால் வலித்து மயங்கிச் சாய்ந்தனர். அவர்கள் படும் அவஸ்தையைப் பார்த்து சுக்ராச்சாரியாரும், அசுரேந்திரனும் கைகொட்டி ரசித்தனர். வேடிக்கை பார்க்க வந்த அசுரமக்கள், அவர்கள் மீது கதாயுதங்களை வீசினர். அவை அவர்கள் உடல்களைப் பதம்பார்த்து ரத்தம் கொட்டியது. இப்படி நடந்த கொடுமைக்குப் பிறகு, அவர்களை சிலகாலம் விடுவித்தான் கஜமுகாசுரன். தேவர்கள் இதுதான் சமயமென கைலாயத்தை நோக்கி விரைந்தனர். வாசலில் சின்னக்கணபதி வீற்றிருந்தான். விதிமுறைப்படி அவர்கள் கணபதியைப் பூஜித்தனர். கணபதியே! எங்கள் நிலையைப் பார்த்தீரா! பல தவங்கள் செய்தாலும், இறைவனின் சோதனைக்கு நாங்கள் ஆளாகியுள்ளோம். கஜமுகாசுரனுக்கு தங்கள் தந்தையார் தந்த வரத்தால் நாங்கள் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. காக்கும் கடவுளே! கணபதியே! நீர் தான் எங்களுக்கு அருள வேண்டும். சிவபெருமானை சந்திக்க அனுமதி தர வேண்டும், என்றனர். கணபதி அவர்களை நோக்கி புன்னகைத்தார். தேவர்களே! கவலை வேண்டாம். என்னைத் தஞ்சமடைந்தவர்களை கைவிட மாட்டேன். வாருங்கள், தந்தையாரைப் பார்க்கச் செல்வோம், எனக்கூறி அவர்களை அழைத்துச் சென்றார். தேவர்களின் நிலை கண்ட சிவபெருமான் கொதித்துப் போனார்.

தேவர்களே! தேவராயினும், அசுரராயினும் நான் நீண்ட ஆயுள் என்னும் வரத்தைக் கொடுப்பது உலக மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே! கஜமுகாசுரன் நான் கொடுத்த வரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால், அவன் சக்தி இழந்தவனாகிறான். இருப்பினும், நான் அவனுக்கு கொடுத்துள்ள வரத்தின்படி, என் சக்தியான கணபதியை அனுப்பி அவனை சம்ஹாரம் செய்கிறேன், என்றதும், ஆஹா... விமோசனம் அடைந்தோம், என்று சொன்ன தேவர்கள், மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கணபதியைப் புகழ்ந்து பாடினர். பின்னர், தந்தையின் கட்டளைப்படி, கணபதி அசுரர்களின் பட்டினமான மதங்கநகரத்திற்கு படைகளுடன் புறப்பட்டார். அசலன் என்ற பூதகணம் அவரை தன் தோளில் ஏற்றிக்கொண்டது. சின்னக் கணபதியின் வருகை பற்றி, மதங்கநகருக்கு தகவல் தெரிந்து விட்டதுயாரோ ஒரு சிறுவன், போருக்கு வருகிறான் என்பதைக் கேட்ட கஜமுகாசுரனும், சுக்ராச்சாரியார், அசுரேந்திரன் ஆகியோரும் விழுந்து விழுந்து சிரித்தனர். தேவர்களுக்கு போயும் போயும் ஒரு குழந்தை தானா தலைவனாகக் கிடைத்தான். இந்த அவமானத்தை என்னவென்று சொல்வது? என்று தங்களுக்குள் கேலி பேசிக்கொண்டனர். மதங்கநகரத்தை சின்னக்கணபதி அடையும் முன்பே, கஜமுகாசுரன் தனது படைகளுடன் போர்க்களத்தில் தயாராக நின்றான். கணபதி தேவர்கள் புடைசூழ அங்கு வந்ததும், கஜமுகாசுரன் அவரை நோக்கி, ஏ சிறுவனே! என்னைப் போலவே யானை முகத்துடன் நீ பிறந்துள்ளதால், உன்னை உயர்ந்தவனாக எண்ணிக் கொள்ளாதே. நீ குழந்தை. பலகாலம் வாழ வேண்டியவன். இந்த தேவர்களின் பேச்சைக் கேட்டு உன் உயிரைப் போக்கிக் கொள்ளாதே. என் சிறுவிரலின் பலம் கூட நீ இருக்க மாட்டாய். திரும்பிப் போய்விடு. நீ சிறுவன் என்பதால், உன் மீது கருணை கொண்டு உன்னை திரும்பிச் செல்ல அனுமதிக்கிறேன். போய்விடு, என்றான். கணபதி கலகலவெனச் சிரித்தார்.

 
மேலும் விநாயகர் புராணம் »
temple news
அடியே குடும்பினி! உன் நகைகளை எங்கே மறைத்து வைத்தாய்? நான் அதைக் கேட்பேன் என்று <உன் தாய் வீட்டுக்கு ... மேலும்
 
temple news
எமகிங்கரர்கள் அவனை எமதர்மராஜா முன்பு நிறுத்தினர். ராஜாதி ராஜா! இந்த மனிதன், பூலோகத்தில் செய்யாத ... மேலும்
 
temple news
அந்த தபஸ்வியின் பெயர் சிவனன். பிருகு மகரிஷிக்கும் புலோமைக்கும் பிறந்த செல்வ புத்திரர். அவர், காட்டில் ... மேலும்
 
temple news
பிருகுவின் தவவலிமைக்கு அந்த பூதம் மதிப்பளித்து, முனிவரே! நான் ஒரு அந்தணன். முற்பிறவியில், இந்த ... மேலும்
 
temple news
அசுரேந்திரனின் மனதில் சற்றே நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையுடன், குருவே! மரகதரைப் பற்றி கொஞ்சம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar