Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் புராணம் பகுதி-10 விநாயகர் புராணம் பகுதி-12 விநாயகர் புராணம் பகுதி-12
முதல் பக்கம் » விநாயகர் புராணம்
விநாயகர் புராணம் பகுதி-11
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 பிப்
2011
02:02

அவளது தவம் நூற்றாண்டுகளைக் கடந்தது. பெண்களின் தவத்திற்கு குறைந்த காலத்திலேயே பலன் கிடைத்து விடும். பல ஆண்கள் உயிருடன் நீண்ட காலம் பூமியில் வாழ காரணமே பெண்கள் தான். அவர்கள் தான் காரடையான் நோன்பு, வரலட்சுமி விரதம், தெய்வங்களின் திருக்கல்யாண தினம் ஆகிய நேரங்களில் தீர்க்க சுமங்கலியாக வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். தங்கள் தாலிக் கயிறு என்றும் புதிதாக விளங்க, நித்ய சுமங்கலியாக இருக்க கயிறு மாற்றிக் கொள்கிறார்கள். இதனால், நாத்திகனே கணவனாக அமைந்தாலும் கூட, இந்தப் பெண்ணின் நன்மை கருதி, அவனையும் தீர்க்காயுளுடன் இந்த பூமியில் திரிய விடுகிறான் கடவுள். அதிதியின் தவத்துக்கு நூறு ஆண்டுகளில் பலன் கிடைத்து விட்டது. விநாயகப் பெருமான் அவளது தவத்தை மெச்சி அவள் முன் தோன்றினார். முனி பத்தினியே! என்ன காரணத்திற்காக நூறாண்டுகள் தவம் மேற்கொண்டாய், என்று கேட்டார். வேதாந்தக, நராந்தகர்களால் ஏற்படும் அவலம் பற்றியும், தனக்கு மகனாகப் பிறந்து, அவர்களை அடக்கி வைக்க வேண்டும் என்றும் அதிதி கேட்டுக் கொண்டாள். விநாயகரும் அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்து விட்டார். சில காலம் கழிந்தது. வேதாந்தக, நராந்தகர்களின் அட்டூழியம் தீவிரமானது. படைக்கும் கடவுளான பிரம்மாவே மேரு மலை குகையில் ஒளிந்து கொண்டார் என்றால் மற்றவர்களைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? இதுகண்டு பூமிமாதா கதறினாள். நல்லவர்களின் மரணம் அவனை வாட்டியது. அவள் பிரம்மா ஒளிந்திருந்த மேருமலைக்குச் சென்று அவரிடமே முறையிட்டாள். கவலைப்படாதே மகளே! உன் பாரம் வெகு விரைவில் குறையும். விநாயகப்பெருமான் அதிதியின் வயிற்றில் அவதரிக்கப் போகிறார், அவரால் நமக்கு விமோசனம் கிடைக்கும், என்றார். அந்நேரத்தில் அசரீரியும் ஒலித்தது. பூமாதேவியே கலங்காதே! நீ பொறுமையுடன் இரு. விநாயகர் இன்று அதிதியின் மகனாக அவதரிக்கப் போகிறார், என்ற குரல் கேட்டு அவள் மட்டுமல்ல, தேவர்களெல்லாம் மகிழ்ந்தார்கள். பூமாதேவி மகிழ்ச்சியுடன் சென்றாள். அன்று மாலையில் அதிதி விநாயக பூஜையைச் செய்து கொண்டிருந்தாள். அப்போது ஆயிரம் தலைகளுடன், பல ஆயிரம் கைகளுடனும் இன்னும் பல்லாயிரம் உறுப்புகளுடனும் விநாயகர் அவள் முன்னால் வந்து நின்றார். அம்மா என பாசத்தோடு அழைத்தார். விநாயகரின் ஒளிமிக்க அந்த தரிசனம் கண்டு அதிதி மகிழ்ந்தாள்.

கணபதியே! வந்து விட்டீர்களா! என்ன பாக்கியம் செய்தேன், என்றவள், அவரது பாதங்களில் அடிபணிய முற்பட்டாள். விநாயகர் விலகி நின்றார். தாயே! உங்கள் பிள்ளை நான். என் காலில் நீங்கள் விழலாமா? உங்கள் காலடியில் அல்லவா நான் ஆசிபெற வேண்டும், என்றார் அடக்கத்துடன். இறைவன் இப்படித்தான்! அவனது அன்பு அளப்பரியது. யார் அவனுடைய திருவடிகளைத் தேடி ஓடுகிறார்களோ, அவர்களைத் தேடி அவன் வந்துவிடுவான். அவர்களது பாதங்களிலும் பணிய தயாராகி விடுவான். ராமாவதராத்திலும் ஸ்ரீமன் நாராயணனின் நோக்கம் அது தானே! தன்னை வணங்கும் ரிஷிகளைத் தரிசிக்கத்தானே காட்டுக்குச் செல்லும்படியான ஒரு சூழ்நிலையையே பகவான் உருவாக்கிக் கொண்டார். கிருஷ்ணாவதாரத்தில், கோபியர்களாகப் பிறந்த தனது பக்தர்களை ஆட்கொண்டார்! இப்படித்தான், இங்கே கணபதியின் பிறப்பும் அமைகிறது. அதிதி பாசத்துடன், குணாநிதியே! தாங்கள் இவ்வளவு பெரிய வடிவத்தில் இருந்தால், தங்களை எப்படி என்னால் வளர்க்க முடியம்? பெற்றவர்களுக்கு பிள்ளையை மடியில் தூங்க வைக்க வேண்டும். தாலாட்ட வேண்டும், பாலூட்ட வேண்டும் என்றெல்லாம் ஆசையிருக்காதா? தாங்கள் பால கணபதியாக ஒற்றை முகத்துடன் உருவெடுத்து என் மடியில் தவழ வேண்டும், என்று கேட்டாள். அந்த பக்தையின் கோரிக்கை அந்தக்கணமே நிறைவேறிவிட்டது. கையில் தாமரையுடன், விநாயகப்பெருமான் பெரிய வயிறுடன், தும்பிக்கையுடன் குழந்தையாக அவள் மடியில் தவழ்ந்தார். உலகையே உள்ளடக்கிய பெருமான் அல்லவா! அதனால் தான் பானை வயிறு அமைந்தது. அதிதி குழந்தையை எடுத்துக்கொண்டு காஷ்யபரிடம் ஓடினாள். விநாயகப்பெருமானே தங்கள் குழந்தையானது கண்டு அவர்கள் மகிழ்ந்தனர். ஊராருக்கு அவர் கணபதி என்ற கடவுள் என்றாலும், இப்போது தங்கள் பிள்ளையாகி விட்டாரே! எனவே, குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என ஆலோசித்தனர். அவரது பெரிய வயிறை மனதில் கொண்டு மகோற்கடன் என பெயர் சூட்டினர். மகோ என்றால் பெரியது. கடம் என்றால் பானை. பானை வயிற்றோன் மகோற்கடன் அவர்களது அன்புச்செல்வமாக வளர்ந்தான். அதிதிக்கு இயற்கையாகவே பால் சுரந்தது. அந்த பாலைக் குடித்து, நற்குண நற்செய்கைகளுடன் மகோற்கடன் வளர்ந்து வந்தான்.

அவனது பிறப்புக்கு பிறகு உலகின் நிலை மாறியது. தவறாமல் மழை, பயிர்களின் செழிப்பு, எல்லாவகையிலும் முன்னேற்றம், குழந்தை பெற தகுதியற்றவர்கள் என ஒதுக்கப்பட்டவர்களுக்கு கூட மகப்பேறு... இப்படி பல சுப பலன்கள் நடந்தன. தேவர்களெல்லாம், தேவாந்தக, நராந்தகர்களின் முடிவு காலத்திற்காக காத்திருந்தனர். பூலோகவாசிகளில் நல்லவர்களுக்கு நன்மை நடக்க, தீயவர்களான அசுரர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவளித்த வேதாந்தக, நராந்தகர்கள் வசித்த பகுதிகளில் ரத்தமழை கொட்டியது. அவர்களது இடது கண்கள் துடித்தன. இடதுகண் துடித்தால் ஆகாது என்பார்கள். இந்த அபசகுனங்கள் கண்டு அரண்டுபோன வேதாந்தக, நராந்தகர் ஜோதிடர்களை வரவழைத்தனர். தங்களுக்கு ஏற்பட்ட அபசகுணங்கள் பற்றி கேட்ட போது, ஜோதிடர்கள், பேரரசர்களே! காஷ்யப முனிவரின் புத்திரனாக ஒரு குழந்தை தோன்றியிருக்கிறான். யானை முகம் கொண்ட அந்தச் சிறுவனால் உங்களுக்கு ஆபத்து. நீங்கள் வேண்டிய ஏற்பாட்டைச் செய்து கொள்ளுங்கள், என்றனர். குழந்தையாவது கொல்வதாவது... என்ன இவர்கள் உளறுகிறார்கள்? என்று நினைத்த வேதாந்தக, நராந்தகர் எதற்கும், அந்தக் குழந்தையை அழித்து விடுவது நல்லது என்றே கருதினர். சுரசை என்ற அரக்கியை அழைத்து, இப்போதே காஷ்யபரின் ஆசிரமத்திற்கு சென்று, அங்கே பிறந்திருக்கும் யானைத்தலை குழந்தையைக் கொன்றுவிடு, என உத்தரவு பிறப்பித்தனர்.

 
மேலும் விநாயகர் புராணம் »
temple news
அடியே குடும்பினி! உன் நகைகளை எங்கே மறைத்து வைத்தாய்? நான் அதைக் கேட்பேன் என்று <உன் தாய் வீட்டுக்கு ... மேலும்
 
temple news
எமகிங்கரர்கள் அவனை எமதர்மராஜா முன்பு நிறுத்தினர். ராஜாதி ராஜா! இந்த மனிதன், பூலோகத்தில் செய்யாத ... மேலும்
 
temple news
அந்த தபஸ்வியின் பெயர் சிவனன். பிருகு மகரிஷிக்கும் புலோமைக்கும் பிறந்த செல்வ புத்திரர். அவர், காட்டில் ... மேலும்
 
temple news
பிருகுவின் தவவலிமைக்கு அந்த பூதம் மதிப்பளித்து, முனிவரே! நான் ஒரு அந்தணன். முற்பிறவியில், இந்த ... மேலும்
 
temple news
அசுரேந்திரனின் மனதில் சற்றே நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையுடன், குருவே! மரகதரைப் பற்றி கொஞ்சம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar