Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நோய்,நொடியின்றி வாழ.. சந்தி மறச்சு ... அய்யனாருக்கு காது வளர்க்கும் ஆம்பள வாரிசுகள்! அய்யனாருக்கு காது வளர்க்கும் ஆம்பள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் கங்கை போல புண்ணியப் பொய்கை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜன
2013
12:01

மதுரையின் அடையாளச் சின்னங்களில் ஒன்று யானைமலை. புராதான  காலத்தில் நகரை காக்கும் பணியில்  ஈடுபட்ட நாகப்பாம்பு, நாகமலையாகவும், யானை யானைமலையாக மாறியதாக  வரலாறு.  நம் பாரம்பரியம், பண்பாடு,  கலாசாரத்தை பறைசாற்றும் வகையில், யானைமலையில் சமணர் படுகைகள், புத்தர், மகாவீரர் சிற்பங்கள், நரசிங்கம் குடை வரைக் கோயில், லாடன் கோயில், தீபத்தூண்கள், வற்றாத ஜீவஊற்றுகள் காணப்படுகின்றன. யானைமலையின் வால் பகுதியில் அமைந்த ஒய்.கொடிக்குளம் மலை அடிவாரத்தில், இயற்கை எழில்  கொஞ்சும் பசுமையான சோலைகளுக்கு மத்தியில் அமைந்த பொய்கைத் தண்ணீரை, மக்கள் புனித நீராக  கருதுகின்றனர். அருகிலுள்ள தாள  தாமரைக்குளத்து தண்ணீர் சற்று  உவர்ப்பாக உள்ளது. ஆனால் பொய்கையில் ஊறும் தண்ணீர் பால் நிறத்தில், குடிக்க குடிக்க... தெவிட்டாத  தேனமுதாய் தித்திக்கிறது.  கிராம திருவிழா, கோயில் விழா, வீட்டு விசேஷங்களுக்கு இத்தண்ணீரை, பூஜைக்கு பயன்படுத்துகின்றனர். 

வீடுகளில் குடிக்கவும் பயன்படுத்துகின்றனர். பொய்கைக்கு அருகில் மூலிகை மரங்கள், மலைக் குகைகள், வேதநின்ற நாராயண பெருமாள் கோயில், மலைச்சாமி கோயில்கள் உள்ளன.  அப்பகுதியை சேர்ந்த மலைச்சாமி கூறுகையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலை கொள்ளையடிக்க அன்னியர் திட்டமிட்டபோது, அங்கிருந்த பெருமாளை இங்கு கொண்டு வந்து, மலைக்குகைக்குள் வைத்ததாக முன்னோர்கள் கூறுவர். அதன்படி இங்கு பெருமாள் கோயில்  கட்டப்பட்டது. பொய்கைத் தண்ணீரை குடிக்க மட்டும் பயன்படுத்துகிறோம். யானைமலையை தான் தெய்வமாக சுற்றுவட்டாரத்தினர் கருதுகின்றனர். வீடு களில் முதல் குழந்தை பிறந்தால், மலைச்சாமி என பெயர் வைப்பர். எனக்கும் அப் படித்தான் பெயர் வைத்தனர், என்றார். இக்கிராமத்திற்கு செல்வோர்,  பொய்கையில் நீர்அருந்தி, பெருமாள், மலைச்சாமி தெய்வங்களை வணங்காமல் செல்வதில்லை. அதில் நாமும் விதிவிலக்கு அல்ல என்பது அங்கு சென்ற போது தெரிந்தது. எல்லாம் சரி தான். போதிய பராமரிப்பு இன்றி, இவை பாழாகி வருவது தான் வேதனை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; நாளை 17 ம் தேதி ராம நவமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை ஸ்ரீவாரி கோவிலில், ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, நாளை ஏப்ரல் 17ம் தேதி பிரமாண்ட ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி மூன்று மாத கொடியேற்றம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar