Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க ... கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபஷேகம்! கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோபித்துக் கொண்டு சென்ற சேலம் மாரியம்மன்: அழைத்து வந்த பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 பிப்
2013
10:02

சேலம்: சேலம், அரிசிபாளையம் மாரியம்மன் கோபித்துக் கொண்டு, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றதால், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், சமயபுரம் சென்று, அம்மனை ஆறுதல்படுத்தி அழைத்து வந்தனர்.சேலம் மாநகரப் பகுதிகளில், எட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் இக்கோவில்களில் திருவிழா வெகுசிறப்பாக நடத்தப்படும். அதேபோன்று, மாசி மாதத்தில், அரிசிபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்தப்படும். சில மாதங்களுக்கு முன், அரிசிபாளையம் பகுதியில், விபத்து, தற்கொலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.இந்நிலையில், மாரியம்மன் கோவிலுக்கு ஸ்வாமி கும்பிட சென்ற லோகநாயகி என்ற பெண்ணுக்கு திடீரென அருள் வந்தது. அப்போது, "எனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை; சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டேன் என, உரக்க கத்தியபடி அருள்வாக்கு கூறினார்.அவரைப் போன்று, ஸ்வாமி கும்பிட வந்த மேலும் சில பெண்களும், ஆண்களும், லோகநாயகி கூறியபடியே அருள்வாக்கு கூறினர்.அதைத்தொடர்ந்து, ஊர் நிர்வாகிகள், இது தொடர்பாக பேச்சு நடத்தினர். சமயபுரம் சென்று மாரியம்மனை மீண்டும் அழைத்து வருவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக, பல்வேறு தரப்பிலும் வாக்கு கேட்கப்பட்டது. நேற்று முன்தினம், பத்துக்கும் மேற்பட்ட பஸ், வேன்களில், ஆண், பெண் பக்தர்கள் திரண்டு, சமயபுரம் சென்றனர். கோவிலுக்கு செல்லும்போது, சக்தி குடம், பெரியமாலையையும் எடுத்து சென்றனர்.நேற்று அதிகாலை, 5.30 மணியளவில், மாலையை அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். அப்போது, சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை சாத்தும்போது, அதை எடுத்து பூசாரி உங்கள் வசம் கொடுப்பார் என, அருள்வாக்கில் கூறப்பட்டது போல், அக்கோவிலில் நடந்தது. அதன்பின், அனைத்து பக்தர்களும், மாலையை எடுத்துக் கொண்டு, சேலம் வந்தனர். பின், அண்ணாபூங்கா அருகில் உள்ள கிணற்றில் தீர்த்தக்குடம் எடுத்து வந்து, அரிசிபாளையம் மாரியம்மனுக்கு மாலை சாத்தப்பட்டது. பெண் பக்தர்கள் அருள் வந்து ஆடினர்.இது குறித்து சூரமங்கலம் அ.தி.மு.க., பகுதி செயலாளர் நேதாஜி கூறியதாவது:சில மாதங்களுக்கு முன், தொடர்ச்சியாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஒரே நாளில், மூன்று பேர் தற்கொலை செய்யும் சம்பவங்களும் நடந்தது. மாரியம்மன் கோவிலில் ஏதேனும் குற்றம் நடந்து விட்டதோ என கருதினோம். இந்நிலையில், கோவிலுக்கு சென்ற பெண்களுக்கு அருள் வந்தது. அவர்கள், நான் இங்கு இல்லை, சமயபுரம் சென்று விட்டேன், என கூறினர். அதை அடிப்படையாகக் கொண்டு, சமயபுரம் கோவிலுக்கு சென்று மீண்டும் அம்மனை அழைத்து வந்தோம். இப்போது தான் எங்களுக்கு நிம்மதியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாத கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar