கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் ரூ.50 லட்சம் செலவில் புதிய பிரகாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2013 12:02
தேனி:வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயிலில், 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய பிரகாரம் அமைக்கப்பட உள்ளது.கண்ணீஸ்வரமுடையார் கோயிலை சுற்றிலும் கோயில் நிலங்களே அதிகம் உள்ளன. இந்த நிலங்களில் விவசாயம் நடக்கும் போது, கோயில் மதில்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையிலும், கிழக்கு பகுதியில் வாசல் அமைக்கும் வகையிலும் தற்போது உள்ள பிரகாரத்தை சுற்றிலும் புதிய பிரகாரம் அமைக்கப்பட உள்ளது. இந்த பிரகாரத்தின் உள் பகுதியில், பளிங்கு கற்கள் பதிக்கப்பட உள்ளன. பிரகாரத்தின் கிழக்கு பகுதியில் வாசல் அமைக்கப்பட உள்ளது. இதற்கு 50 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அதேபோல், வீரபாண்டி பெரியாற்றின் மேற்கு கரையில் தற்போது 90 லட்சம் ரூபாய் செலவில், ஹாலோ பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்த பகுதியில், சாஸ்திர சடங்குகள் செய்பவர்கள் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் வசதியாக, 22 லட்சம் ரூபாய் செலவில் ஷெட் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் பேரூராட்சி பொதுநிதியில் இருந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.