Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
நெல்லையப்பர் கோயிலில் பத்ரதீப விழா துவக்கம்!
பிப்ரவரி 07,2013
அ-
+
Temple images

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் தை அமாவாசை பத்ரதீப திருவிழா இன்று (7ம் தேதி) துவங்குகிறது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையை முன்னிட்டு பத்ரதீப திருவிழா நடக்கும். இந்த ஆண்டு பத்ரதீப திருவிழா இன்று துவங்கி 9ம் தேதி வரை நடக்கிறது. 3 நாட்களும் சுவாமி, அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. நாளை மாலை 6.20 மணிக்கு கோயில் மணி மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றப்படுகிறது.

10 ஆயிரம் தீபங்கள்: 9ம் தேதி மாலை 6 மணி வரை மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள், ஆறுமுக நயினார் உள் சந்நிதி, வெளி பிரகாரங்களில் 10 ஆயிரம் தீபங்கள் ஏற்றப்படும். இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில், ஆறுமுக நயினார் தங்க சப்பரத்தில், சண்டிகேஸ்வரர், 63 நாயன்மார்கள் வீதியுலா நடக்கிறது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) கசன்காத்த பெருமாள், பணியாளர்கள், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.