பதிவு செய்த நாள்
04
மார்
2013
10:03
புதுடில்லி: உத்தர பிரதேசத்தின், மதுராவில் இருந்து, கிருஷ்ணர் சிலை, கேரளாவிலுள்ள குருவாயூருக்கு எடுத்து வரப்படுகிறது. குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், அகில பாரத ஸ்ரீமத் பாகவத சத்திரம் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. 29ம் தேதி துவங்கும் இந்நிகழ்ச்சி, ஒன்பது நாட்கள் நடைபெறும். இதில், 70க்கும் மேற்பட்ட சொற்பொழிவாளர்கள், "பகவத் கீதை குறித்து உரை நிகழ்த்துவர். இந்நிகழ்ச்சிக்காக, உத்தர பிரதேசத்தின், மதுராவில் இருந்து, கிருஷ்ணர் சிலை எடுத்து வரப்படும். இம்மாதம், 13ம் தேதி மதுராவில் புறப்படும் கிருஷ்ணர் ஊர்வலம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக, 29ம் தேதி, கேரளாவிலுள்ள குருவாயூர் சென்றடையும்.