Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்!
மார்ச் 05,2013
அ-
+
Temple images

நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 181 வது அவதார தின விழாவை முன்னிட்டு, நார்கோவிலில் இருந்து பிரமாண்ட ஊர்வலம், சுவாமிதோப்பு தலைமை பதிக்குச் சென்றது. "அய்யா வழி பக்தர்களால் வணங்கப்படும், அய்யா வைகுண்டரின் அவதாரதின விழா, மார்ச் 3 ல் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, 181 வது அவதார தின விழா நடந்தது. திருவனந்தபுரம், திருச்செந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அய்யா வழி பக்தர்கள், நேற்று முன்தினம், ஊர்வலமாக நாகர்கோவில் வந்தனர். நேற்று காலை 6 மணிக்கு, நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து தலைமை பதியான சுவாமி தோப்பிற்கு, ஊர்வலம் புறப்பட்டது. முத்துக்குடை, சந்தனக் குடங்கள் ஏந்தி ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த விழாவுக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.