பதிவு செய்த நாள்
05
மார்
2013
10:03
நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 181 வது அவதார தின விழாவை முன்னிட்டு, நார்கோவிலில் இருந்து பிரமாண்ட ஊர்வலம், சுவாமிதோப்பு தலைமை பதிக்குச் சென்றது. "அய்யா வழி பக்தர்களால் வணங்கப்படும், அய்யா வைகுண்டரின் அவதாரதின விழா, மார்ச் 3 ல் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, 181 வது அவதார தின விழா நடந்தது. திருவனந்தபுரம், திருச்செந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அய்யா வழி பக்தர்கள், நேற்று முன்தினம், ஊர்வலமாக நாகர்கோவில் வந்தனர். நேற்று காலை 6 மணிக்கு, நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து தலைமை பதியான சுவாமி தோப்பிற்கு, ஊர்வலம் புறப்பட்டது. முத்துக்குடை, சந்தனக் குடங்கள் ஏந்தி ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த விழாவுக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.