பெரம்பலூர்: பெரம்பலூர் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில், 150வது விவேகானந்தர் ஜெயந்தி மற்றும் ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு, ராமகிருஷ்ணா கல்வி குழுமங்களின் தாளாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். செயலாளர் விவேகானந்தன் வரவேற்றார். ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கமால்பாட்சா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், பெரம்பலூர் எம்.எல்.ஏ., இளம்பை தமிழ்ச்செல்வன் பேசுகையில், ""திட்டமிட்ட உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். இலக்குகள் வானத்தை நோக்கி இருந்தால், வாழ்க்கையில் நட்சத்திரம் போல் ஜொலிக்க முடியும், என்றார். ஒருங்கிணைப்பாளர் மணிராஜன் நன்றி கூறினார்.