வடுகபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா வரும் 10ம் தேதி நடக்கிறது. பச்சாபாளையம் அருகே, நாரணாபுரம் ஊராட்சியில், வடுகபாளையம் உள்ளது. இங்கு சவுடேஸ்வரி அம்மன் மற்றும் காவல் தெய்வம் வீரமாத்தியம்மன் கோவில் உள்ளது. சிவராத்திரி விழாவில், வரும் 10ம் தேதி மாலை சவுடேஸ்வரி அம்மனுக்கு கொலு வைக்கப்படுகிறது. இரவு விநாயகர் கோவிலிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. அம்மன் அழைப்பு நடக்கிறது. 11ம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு பள்ளய பூஜை நடக்கிறது. 5.00 மணிக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது. பொங்கல் வைக்கும் வைபவம் நடக்கிறது.