Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
இறைவனுக்கு சாப்பாடு அவசியமா?
மார்ச் 19,2013
அ-
+
Temple images

ஐயையோ! இவ்வளவு பாலைக் கொண்டு போய், சுவாமியின் தலையில் கொட்ட வேண்டுமா! இந்தியாவின் பொருளாதாரத்தை வீணடிக்கிறீர்களே! நாலு குழந்தைகளுக்கு இதைக் கொடுத்தால் பசியாறுமே! என்று எச்சில் கையால் காக்கை ஓட்டாத நாத்திகன் பேசுவான். ஏன்...நாத்திகம் பேசாதவர்களுக்கு கூட இதில் ஏதோ நியாயம் இருப்பது போல் தெரிகிறது. சுவாமிக்கு கொழுக்கட்டை, புளியோதரை, தயிர்சாதம் படைத்தால், இதை மட்டும் அந்த சுவாமி நேரில் வந்து எடுத்து சாப்பிடட்டும்.அப்புறம் யாராவது நிவேதனம்செய்கிறானா பார்க்கலாம், என்று மார் தட்டுபவர்களும் பூமியில் உண்டு.

இந்த நிவேதனம், அபிஷேகமெல்லாம் எதற்கு? இதை பக்தன் செய்யாவிட்டால் பகவான்சாப்பிடாமல் போய் விடுவானா! அல்லது யாரிடமாவது இதை நீ எனக்கு நிவேதனம் செய்தே ஆக வேண்டுமென கட்டாயப்படுத்தினானா?நிவேதனம் என்றால் அர்ப்பணித்தல். வெறும் சோறும் கறியும் இறைவனுக்கு படைப்பது நிவேதனமல்ல! நம் ஆத்மாவைஇறைவன் முன்னால் வைத்து, இதை நீ ஸ்வீகரித்துக் கொள் என்று சொல்ல வேண்டும். நானே ஒருவகை அன்னம் (சோறு) தான். இந்த அன்னத்தை நீ எடுத்துக் கொள், என்று கெஞ்ச வேண்டும். இவ்வாறு, ஆத்மாவை அவன் முன்னால் வைக்க வேண்டுமானால் மனப்பக்குவம் வர வேண்டும். அந்த பக்குவத்தை வரவழைப்பதற்கான பயிற்சி தான் சுவாமிக்கு உணவு படைப்பது.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.