Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குறுந்தொகை (பகுதி-2) குறுந்தொகை (பகுதி-4)
முதல் பக்கம் » குறுந்தொகை
குறுந்தொகை (பகுதி-3)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
12:03

குறுந்தொகை - 101. குறிஞ்சி - தலைவன் கூற்று

விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்  5
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே.  
- பரூஉ மோவாய்ப் பதுமனார்.  

குறுந்தொகை - 102. நெய்தல் - தலைவி கூற்று

உள்ளின் உள்ளம் வேமே உள்ளா
திருப்பினெம் அளவைத் தன்றே வருத்தி
வான்றோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.  
- அவ்வையார்.  

குறுந்தொகை - 103. நெய்தல் - தலைவி கூற்று

கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல்
கவரிதழ் அன்ன தூவிச் செவ்வாய்
இரைதேர் நாரைக் கெவ்வ மாகத்
தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும்
வாரார் போல்வர்நங் காதலர்  5
வாழேன் போல்வல் தோழி யானே.  
- வாயிலான் தேவனார்.  

குறுந்தொகை - 104. பாலை - தலைவி கூற்று

அம்ம வாழி தோழி காதலர்
நூலறு முத்தின் தண்சிதர் உறைப்பத்
தாளித் தண்பவர் நாளா மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்
பிரியும் நாளும் பலவா குபவே.  5
- காவன் முல்லைப்பூதனார்.  

குறுந்தொகை - 105. குறிஞ்சி - தலைவி கூற்று

புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர்மலை நாடன் கேண்மை  5
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.  
- நக்கீரர்.  

குறுந்தொகை - 106. குறிஞ்சி - தலைவி கூற்று

புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர்
வரையிழி அருவியின் தோன்றும் நாடன்
தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய்பெய் தீயின் எதிர்கொண்டு  5
தான்மணந் தனையமென விடுகந் தூதே.  
- கபிலர்

குறுந்தொகை - 107. மருதம் - தலைவி கூற்று

குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன
தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்
நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்
கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்  5
யாணர்ஊரன் தன்னொடு வதிந்த
ஏம இன்துயில் எடுப்பி யோயே.  
- மதுரைக் கண்ணனார்.

குறுந்தொகை - 108. முல்லை - தலைவி கூற்று

மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயிற் படரப் புறவிற்
பாசிலை முல்லை ஆசில் வான்பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று
உய்யேன் போல்வல் தோழி யானே.  5
- வாயிலான் தேவனார்.  

குறுந்தொகை - 109. நெய்தல் - தோழி கூற்று

முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை
புணரி இகுதிரை தரூஉந் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது மன்னோ நன்னுதற் கவினே.  
- நம்பி குட்டுவனார்.  

குறுந்தொகை - 110. முல்லை - தலைவி கூற்று

வாரா ராயினும் வரினும் அவர்நமக்கு
யாரா கியரோ தோழி நீர
நீலப் பைம்போ துளரிப் புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை யாட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த  5
வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று
இன்னா தெறிதரும் வாடையொடு
என்னா யினள்கொல் என்னா தோரே.  
- கிள்ளிமங்கலங்கிழார்.  

குறுந்தொகை - 111. குறிஞ்சி - தோழி கூற்று

மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும்
அதுவென உணரும் ஆயின் ஆயிடைக்
கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன
கேழிருந் துறுகற் கெழுமலை நாடன்  5
வல்லே வருக தோழிநம்
இல்லோர் பெருநகை காணிய சிறிதே.  
- தீன்மதி நாகனார்.  

குறுந்தொகை - 112. குறிஞ்சி - தலைவி கூற்று

கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே.  5
- ஆலத்தூர் கிழார்.

குறுந்தொகை - 113. மருதம் - தோழி கூற்று

ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்  5
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.  
- மாதீர்த்தனார்.  

குறுந்தொகை - 114. நெய்தல் - தோழி கூற்று

நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி
நின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்க
செல்கம் செலவியங் கொண்மோ அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என்மகள் நுதலே.  5
- பொன்னாகனார்.  

குறுந்தொகை - 115. குறிஞ்சி - தோழி கூற்று

பெருநன் றாற்றிற் பேணாரும் உளரே
ஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டு
புலவி தீர அளிமதி இலைகவர்
பாடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல்
மென்னடை மரையா துஞ்சும்  5
நன்மலை நாட நின்னல திலளே.  
- கபிலர்.  

குறுந்தொகை - 116. குறிஞ்சி - தலைவன் கூற்று

யானயந் துறைவோள் தேம்பாய் கூந்தல்
வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை
நுண்மணல் அறல்வார்ந் தன்ன
நன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே.  
- இளங்கீரனார்.  

குறுந்தொகை - 117. நெய்தல் - தோழி கூற்று

மாரி ஆம்ப லன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு
கண்டல் வேரளைச் செலீஇயர் அண்டர்
கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்
வாரா தமையினும் அமைக  5
சிறியவும் உளவீண்டு விலைஞர்கை வளையே.  
- குன்றியனார்.  

குறுந்தொகை - 118. நெய்தல் - தலைவி கூற்று

புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நாரில் மாலைப்
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ எனவும்
வாரார் தோழிநங் காத லோரே.  5
- நன்னாகையார்.  

குறுந்தொகை - 119. குறிஞ்சி - தலைவன் கூற்று

சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள் முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள்எம் அணங்கி யோளே.  
- சத்திநாதனார்.  

குறுந்தொகை - 120. குறிஞ்சி - தலைவன் கூற்று

இல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு
அரிதுவேட் டனையால் நெஞ்சே காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியா தோயே.  
- பரணர்.  

குறுந்தொகை - 121. குறிஞ்சி - தலைவி கூற்று

மெய்யே வாழி தோழி சாரல்
மைபட் டன்ன மாமுக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற
கோட்டொடு போகி யாங்கு நாடன்
தான்குறி வாயாத் தப்பற்குத்  5
தாம்பசந் தனஎன் தடமென் தோளே.  
- கபிலர்.  

குறுந்தொகை - 122. நெய்தல் - தலைவி கூற்று

பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன
குண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை
ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே.  
- ஓரம் போகியார்.  

குறுந்தொகை - 123. நெய்தல் - தோழி கூற்று


இருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்
நிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறைக்
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே.  5
- ஐயூர் முடவனார்.  

குறுந்தொகை - 124. பாலை - தோழி கூற்று

உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு
இன்னா என்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே.  
- பாலைபாடிய பெருங்கடுங்கோ.  

குறுந்தொகை - 125. நெய்தல் - தலைவி கூற்று

இலங்குவளை நெகிழச் சாஅ யானே
உளெனே வாழி தோழி சாரல்
தழையணி அல்குல் மகளி ருள்ளும்
விழவுமேம் பட்டவென் நலனே பழவிறற்
பறைவலந் தப்பிய பைதல் நாரை  5
திரைதோய் வாங்குசினை யிருக்கும்
தண்ணந் துறைவனொடு கண்மா றின்றே.  
- அம்மூவனார்.  

குறுந்தொகை - 126. முல்லை - தலைவி கூற்று

இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
இவணும் வாரார் எவண ரோவெனப்
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தண் காரே.  5
- ஒக்கூர் மாசாத்தியார்.  

குறுந்தொகை - 127. மருதம் - தோழி கூற்று

குருகுகொளக் குளித்த கெண்டை அயலது
உருகெழு தாமரை வான்முகை வெரூஉம்
கழனியம் படப்பைக் காஞ்சி யூர
ஒருநின் பாணன் பொய்ய னாக
உள்ள பாணர் எல்லாம்  5
கள்வர் போல்வர்நீ அகன்றிசி னோர்க்கே.  
- ஓரம் போகியார்.  

குறுந்தொகை - 128. நெய்தல் - தலைவன் கூற்று

குணகடல் திரையது பறைதபு நாரை
திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை
அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச்
சேயல் அரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே.  5
- பரணர்.  

குறுந்தொகை - 129. குறிஞ்சி - தலைவன் கூற்று

எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளா யத்தை
மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்  5
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே.  
- கோப்பெருஞ்சோழன்.

குறுந்தொகை - 130. பாலை - தோழி கூற்று

நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காதலோரே.  5
- வெள்ளி வீதியார்.  

குறுந்தொகை - 131. பாலை - தலைவன் கூற்று

ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோள்
பேரமர்க் கண்ணி யிருந்த ஊரே
நெடுஞ்சேண் ஆரிடை யதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓரேர் உழவன் போலப்  5
பெருவிதுப் புற்றன்றால் நோகோ யானே.  
- ஒரேருழவனார்.  

குறுந்தொகை - 132. குறிஞ்சி - தலைவன் கூற்று

கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள்
குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே
யாங்குமறந் தமைகோ யானே ஞாங்கர்க்
கடுஞ்சுரை நல்லா னடுங்குதலைக் குழவி
தாய்காண் விருப்பி னன்ன  5
சாஅய்நோக் கினளே மாஅ யோளே.  
- சிறைக்குடியாந்தையார்.  
 
குறுந்தொகை - 133. குறிஞ்சி - தலைவி கூற்று

புனவன் துடவைப் பொன்போற் சிறுதினை
கிளிகுறைத் துண்ட கூழை யிருவி
பெரும்பெய லுண்மையி னிலையொலித் தாங்கென்
உரஞ் செத்தும் உளெனே தோழியென்
நலம்புதி துண்ட புலம்பி னானே.  5
- உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.

குறுந்தொகை - 134. குறிஞ்சி - தலைவி கூற்று

அம்ம வாழி தோழி நம்மொடு
பிரிவின் றாயின் நன்றுமற் றில்ல
குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப்
பூவுடை அலங்குசினை புலம்பத் தாக்கிக்
கல்பொரு திரங்கும் கதழ்வீழ் அருவி  5
நிலங்கொள் பாம்பின் இழிதரும்
விலங்குமலை நாடனொடு கலந்த நட்பே.  
- கோவேங்கைப் பெருங்கதவனார்.  
 
குறுந்தொகை - 135. பாலை - தோழி கூற்று

வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க் காடவர் உயிரென
நமக்குரைத் தோருந் தாமே
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே.  
- பாலைபாடிய பெருங் கடுங்கோ.  

குறுந்தொகை - 136. குறிஞ்சி - தலைவன் கூற்று

காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலும் இன்றே யானை
குளகுமென் றாள்மதம் போலப்
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.  5
- மிளைப்பெருங் கந்தனார்.

குறுந்தொகை - 137. பாலை - தலைவன் கூற்று

மெல்லியல் அரிவைநின் னல்லகம் புலம்ப
நிற்றுறந் தமைகுவெ னாயின் எற்றுறந்
திரவலர் வாரா வைகல்
பலவா குகயான் செலவுறு தகவே.  
- பாலை பாடிய பெருங் கடுங்கோ.

குறுந்தொகை - 138. மருதம் - தோழி கூற்று

கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
எம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
அணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.  5
- கொல்லன் அழிசி.  
 
குறுந்தொகை - 139. மருதம் - தோழி கூற்று

மனையுறை கோழிக் குறுங்காற் பேடை
வேலி வெருகின மாலை யுற்றெனப்
புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்
கின்னா திசைக்கும் அம்பலொடு  5
வாரல் வாழிய ரையவெந் தெருவே.  
- ஒக்கூர் மாசாத்தியார்.  

குறுந்தொகை - 140. பாலை - தலைவி கூற்று

வேதின வெரிநின் ஓதிமுது போத்து
ஆறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்தும்
சுரனே சென்றனர் காதலர் உரனழிந்து
ஈங்கியான் தாங்கிய எவ்வம்
யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே.  5
- அள்ளூர் நன்முல்லையார்.  

குறுந்தொகை - 141. குறிஞ்சி - தலைவி கூற்று

வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
செல்கென் றோளே அன்னை எனநீ
சொல்லின் எவனோ தோழி கொல்லை
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலிக் கொலைவல் ஏற்றை  5
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆரிரு ணடுநாள் வருதி
சாரல் நாட வாரலோ எனவே.  
- மதுரைப் பெருங்கொல்லனார்.  

குறுந்தொகை - 142. குறிஞ்சி - தலைவன் கூற்று

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
தானறிந் தனளோ இலளோ பானாட்
பள்ளி யானையி னுயிர்த்தென்
உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே.  5
- கபிலர்.  

குறுந்தொகை - 143. குறிஞ்சி - தோழி கூற்று

அழிய லாயிழை அன்பு பெரிதுடையன்
பழியும் அஞ்சும் பயமலை நாடன்
நில்லா மையே நிலையிற் றாகலின்
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்
கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத்  5
தங்குதற் குரிய தன்றுநின்
அங்கலுழ் மேனிப் பாய பசப்பே.  
- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.  
 
குறுந்தொகை - 144. பாலை - செவிலித்தாய் கூற்று

கழிய காவி குற்றும் கடல
வெண்டலைப் புணரி யாடியும் நன்றே
பிரிவி லாய முரியதொன் றயர
இவ்வழிப் படுதலும் ஒல்லாள் அவ்வழிப்
பரல்பாழ் படுப்பச் சென்றனள் மாதோ  5
சென்மழை தவழும் சென்னி
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.  
- மதுரை ஆசிரியர் கோடன் கொற்றனார்.  

குறுந்தொகை - 145. நெய்தல் - தலைவி கூற்று

உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி
கானலஞ் சேர்ப்பன் கொடுமை ஏற்றி
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள்
துஞ்சா துறைநரொ டுசாவாத்
துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே.  5
- கொல்லனழிசியார்.  

குறுந்தொகை - 146. குறிஞ்சி - தோழி கூற்று

அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களோ
டின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே.  5
- வெள்ளி வீதியார்.  

குறுந்தொகை - 147. பாலை - தலைவன் கூற்று

வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன
மயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமை
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல
இன்றுயில் எடுப்புதி கனவே
எள்ளார் அம்ம துணைப்பிரிந் தோரே.  5
- கோப்பெருஞ் சோழன்.  

குறுந்தொகை - 148. முல்லை - தலைவி கூற்று

செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்
காசி னன்ன போதீன் கொன்றை
குருந்தோ டலம்வரும் பெருந்தண் காலையும்
காரன் றென்றி யாயிற்  5
கனவோ மற்றிது வினவுவல் யானே.  
- இளங் கீரந்தையார்.  

குறுந்தொகை - 149. பாலை - தலைவி கூற்று
=
அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டுழந்தன்று மன்னே இனியே
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத்
தாங்கு மளவைத் தாங்கிக்  5
காம நெரிதரக் கைந்நில் லாவே.  
- வெள்ளி வீதியார்.  

குறுந்தொகை - 150. குறிஞ்சி - தலைவி கூற்று

சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம்
உள்ளின் உண்ணோய் மல்கும்
புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய்  5
- மாடலூர் கிழார்.

 
மேலும் குறுந்தொகை »
temple news
குறைந்த அடிகளையுடைய பாட்டால் தொகுக்கப்பெற்ற நூல் ஆதலால் குறுந்தொகை எனப்பட்டது. இந்நூல் 400 பாடல்களைக் ... மேலும்
 
குறுந்தொகை - கடவுள் வாழ்த்து தாமரை புரையுங் காமர் சேவடிப்பவழத் தன்ன மேனித் திகழொளிக்குன்றி ... மேலும்
 
குறுந்தொகை - 51. நெய்தல் - தோழி கூற்று கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்நூலறு முத்திற் காலொடு ... மேலும்
 
குறுந்தொகை - 151. பாலை - தலைவன் கூற்று வங்காக் கடந்த செங்காற் பேடைஎழாஅலுற வீழ்ந்தெனக் கணவற் ... மேலும்
 
குறுந்தொகை - 201. குறிஞ்சி - தலைவி கூற்று அமிழ்த முண்கநம் அயலி லாட்டிபால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபுநீல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar