Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரிபாடல் (பகுதி-3) பரிபாடல் (பகுதி-5)
முதல் பக்கம் » பரிபாடல்
பரிபாடல் (பகுதி-4)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2013
05:03

பரிபாடல் - 15. திருமால்

பாடியவர் :: இளம்பெருவழுதியார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: நோதிறம்

கடவுள் வாழ்த்து

திருமாலிருங்குன்றத்தின் சிறப்பு

புல வரை அறியாப் புகழொடு பொலிந்து,
நில வரைத் தாங்கிய நிலைமையின் பெயராத்
தொலையா நேமி முதல், தொல் இசை அமையும்
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம்
பல; எனின், ஆங்கு-அவை பலவே: பலவினும்,  5

நிலவரை ஆற்றி, நிறை பயன் ஒருங்கு உடன்
நின்று பெற நிகழும் குன்று--அவை சிலவே:
சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய
குல வரை சிலவே: குல வரை சிலவினும்  10

சிறந்தது--கல் அறை கடாம் கானலும் போலவும்,
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்,
எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த்
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்.
நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை  15

ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்?
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப.

திருமால் பலராமனுடன் அமர்ந்துள்ள நிலை நினைந்து ஏத்துகா எனல்

அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின்
மரா மலர்த்தாரின் மாண் வரத் தோன்றி,  20

அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய,
சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின்
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்--
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்--
நாமத் தன்மை நன்கனம் படி எழ,  25

யாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து,
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வென,
பொன் புனை உடுக்கையோன் புணஎந்து அமர் நிலையே
நினைமின், மாந்தீர்! கேண்மின், கமழ் சீர்!

மாயோனை ஒத்த நிலையுடைத்து திருமாலிருஞ்சோலைக் குன்றம்

சுனையெலாம் நீலம் மலர, சுனை சூழ்  30

சினையெலாம் செயலை மலர, காய் கனி
உறழ, நனை வேங்கை ஒள் இணர் மலர,
மாயோன் ஒத்த இன் நிலைத்தே.

சென்று தொழ மாட்டாதார் அம் மலையைக் கண்டு தொழுக எனல்

சென்று தொழுகல்லீர்! கண்டு பணிமின்மே--
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே  35

பெருங் கலி ஞாலத்துத் தொன்று இயல் புகழது
கண்டு, மயர் அறுக்கும் காமக் கடவுள்.

குன்றத்தில் பிறக்கும் ஓசைகள்

மக முயங்கு மந்தி வரைவரை பாய,
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட,
மணி மருள் நல் நீர்ச் சினை மடமயில் அகவ,  40

குருகு இலை உதிர, குயிலினம் கூவ,
பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்
நா நவில் பாடல் முழவு எதிர்ந்தன்ன,
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது--ஒன்னார்க்
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று.  45

குன்றத்தானைச் சுற்றம் புடை சூழப் போற்றுமின்

தையலவரொடும், தந்தாரவரொடும்,
கைம் மகவோடும், காதலவரொடும்,
தெய்வம் பேணித் திசை தொழுதனிர் செல்மின்--
புவ்வத் தாமரை புரையும் கண்ணன்,
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன்,  50

எவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ் வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்
அன்பு-அது மேஎய் இருங்குன்றத்தான்.

பலதேவ வாசுதேவர்கள் இருவரையும் வாழ்த்துதல்

கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை;
ஒள் ஒளியவை, ஒரு குழையவை;  55

புள் அணி பொலங் கொடியவை;
வள் அணி வளை நாஞ்சிலவை,
சலம் புரி தண்டு ஏந்தினவை;
வலம்புரி வய நேமியவை;
வரி சிலை வய அம்பினவை;  60

புகர் இணர் சூழ் வட்டத்தவை; புகர் வாளவை;
என ஆங்கு-
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி
இது என உரைத்தங்லிசின், எம் உள் அமர்ந்து இசைத்து, இறை,
இருங்குன்றத்து அடி உறை இயைக! என,
பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே.  66

பரிபாடல் - 16. வையை

(காதற் பரத்தையுடன் புனல் ஆடிய தலைமகன் தோழியை வாயில் வேண்ட, அவள் புனல் ஆடியவாறு
கூறி, வாயில் மறுத்தது.)

பாடியவர் :: நல்வழிசியார்
இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்
பண் :: நோதிறம்


வையையில் நீர் வரவு

கரையே--கை வண் தோன்றல் ஈகை போன்ம் என,
மை படு சிலம்பின் கறியொடும், சாந்தொடும்,
நெய் குடை தயிரின் நுரையொடும், பிறவொடும்,
எவ் வயினானும்--மீதுமீது அழியும்.
துறையே--முத்து நேர்பு புணர் காழ், மத்தக நித்திலம்,  5

பொலம் புனை அவிர் இழை, கலங்கல் அம் புனல் மணி
வலம் சுழி உந்திய, திணை பிரி புதல்வர்
கயந் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ,
தம்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும்
தத்து அரிக் கண்ணார் தலைத்தலை வருமே.  10

செறுவே--விடு மலர் சுமந்து, பூ நீர் நிறைதலின்,
படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும்,
களி நாள் அரங்கின் அணி நலம் புரையும்.
காவே--சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம்
நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே--  15

கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல்.
கான்-அலம் காவும், கயமுன், துருத்தியும், தேன்
தேன் உண்டு பாடத் திசைதிசைப் பூ நலம்
பூத்தன்று--வையை வரவு.

தலைவன் காதற் பரத்தையுடன் கூடி மகிழ, வையையின் வரவு வாய்த்தல்

கருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து,  20

குரும்பையின் முலைப் பட்ட பூ நீர் துடையாள்,
பெருந் தகை மீளி வருவானைக் கண்டே,
இருந் துகில் தானையின் ஒற்றி, பொருந்தலை;
பூத்தனள்; நீங்கு எனப் பொய் ஆற்றால், தோழியர்--
தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின்  25

நாற்றத்தின் போற்றி, நகையொடும் போத்தந்து,
இருங் கடற்கு ஊங்கு இவரும் யாறு எனத் தங்கான்,
மகிழ, களிப் பட்ட தேன் தேறல் மாற்றி,
குருதி துடையாக் குறுகி, மரு(வ), இனியர்,
பூத்தனள் நங்கை; பொலிக! எனநாணுதல்  30

வாய்த்தன்றால்--வையை வரவு.

வையை வானக் கங்கையை ஒத்து விளங்குதல்
மலையின் இழி அருவி மல்கு இணர்ச் சார்ச் சார்க்
கரை மரம் சேர்ந்து கவினி; மடவார்
நனை சேர் கதுப்பினுள் தண் போது, மைந்தர்
மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ், தா அய்;  35

மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல், எஞ்ஞான்றும்,
தேன் இமிர் வையைக்கு இயல்பு.

வையைக்கு உரிய இயல்பு

கள்ளே புனலே புலவி இம் மூன்றினும்,
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண் கண் கெண்டை,  40

பல் வரி வண்டினம் வாய் சூழ் கவினொடும்,
வெல் நீர் வீவயின் தேன் சோர, பல் நீர்
அடுத்துஅடுத்து ஆடுவார்ப் புல்ல, குழைந்து
வடுப் படு மான்மதச் சாந்து ஆர் அகலத்தான்,
எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்கத்  45

தொடுத்த தேன் சோரும் வரை போலும், தோற்றம்--
கொடித் தேரான் வையைக்கு இயல்பு.

தோழி வையையை நோக்கிக் கூறுவாளாய் வாயில் மறுத்தல்

வரை ஆர்க்கும் புயல்; கரை
திரை ஆர்க்கும், இத் தீம் புனல்;
கண்ணியர் தாரர், கமழ் நறுங் கோதையர்,  50

பண்ணிய ஈகைப் பயன் கொள்வான், ஆடலால்
நாள் நாள், உறையும், நறுஞ் சாந்தும், கோதையும்,
பூத்த புகையும், அவியும் புலராமை
மறாஅற்க, வானம்; மலிதந்து நீத்தம்
வறாஅற்க, வைகை! நினக்கு.  55

பரிபாடல் - 17. செவ்வேள்

பாடியவர் :: நல்லழிசியார்
இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்
பண் :: நோதிறம்

கடவுள் வாழ்த்து

மாலைதோறும் பரங்குன்றைப் பரவி உறைபவர்

தேம் படு மலர், குழை, பூந் துகில், வடி மணி,
ஏந்து இலை சுமந்து; சாந்தம் விரைஇ,
விடை அரை அசைத்த, வேலன், கடிமரம்
பரவினர் உரையொடு பண்ணிய இசையினர்,
விரிமலர் மதுவின் மரன் நனை குன்றத்து--  5

கோல் எரி, கொளை, நறை, புகை, கொடி, ஒருங்கு எழ--
மாலை மாலை, அடி உறை, இயைநர்,
மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்?

மாறுமாறு எழும் பல்வேறு ஓசைகளை உடையது பரங்குன்றம்

ஒருதிறம், பாணர் யாழின் தீங் குரல் எழ,
ஒருதிறம், யாணர் வண்டின் இமிர் இசை எழ,  10

ஒருதிறம், கண் ஆர் குழலின் கரைபு எழ,
ஒருதிறம், பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத,
ஒருதிறம், மண் ஆர் முழவின் இசை எழ,
ஒருதிறம், அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப,
ஒருதிறம், பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க,  15

ஒருதிறம், வாடை உளர்வயின் பூங் கொடி நுடங்க,
ஒருதிறம், பாடினி முரலும் பாலை அம் குரலின்
நீடுகிளர் கிழமை நிறை குறை தோன்ற,
ஒருதிறம், ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற,
மாறுமாறு உற்றன் போல் மாறு எதிர் கோடல்--  20

மாறு அட்டான் குன்றம்--உடைத்து.

பரங்குன்றிற்கும் கூடாக்கும் இடைப்பட்ட நிலம்

பாடல் சான்று பல் புகழ் முற்றிய
கூடலொடு பரங்குன்றின் இடை,
கமழ் நறுஞ் சாந்தின் அவர்அவர் திளைப்ப,
நணிநணித்து ஆயினும், சேஎய்ச் சேய்த்து;  25

மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின்
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று.
வசை நீங்கிய வாய்மையால், வேள்வியால்,
திசை நாறிய குன்று அமர்ந்து, ஆண்டுஆண்டு
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை  30

வாய்வாய் மீ போய், உம்பர் இமைபு இறப்ப;
தேயா மண்டிலம் காணுமாறு இன்று.

பரங்குன்றின் அலங்காரம்

வளை முன் கை வணங்கு இறையார்,
அணை மென் தோள் அசைபு ஒத்தார்
தார் மார்பின் தகை இயலார்,  35

ஈர மாலை இயல் அணியார்,
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட,
சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா;
அனைய, பரங்குன்றின் அணி.

தெய்வ விழவும் விருந்தயர்வும்

கீழோர் வயல் பரக்கும், வார் வெள் அருவி பரந்து ஆனாது ஆரோ;  40

மேலோர் இயங்குதலால், வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ;
தெய்வ விழவும், திருந்து விருந்து அயர்வும்,
அவ் வெள் அருவி அணி பரங் குன்றிற்கும்,
தொய்யா விழுச் சீர் வளம் கெழு வையைக்கும்,
கொய் உளை மான் தேர்க் கொடித்தேரான் கூடற்கும்,  45

கை ஊழ் தடுமாற்றம் நன்று.

முருகனை எதிர் முகமாக்கி வாழ்த்துதல்

என ஆங்கு,
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட் கொடி,
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர், இறைவ!
பணி ஒரீஇ, நின் புகழ் ஏத்தி,  50

அணி நெடிங் குன்றம் பாடுதும்; தொழுதும்;
அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும்--
ஏம வைகல் பெறுக, யாம் எனவே.  53

பரிபாடல் - 18. செவ்வேள்

பாடியவர் :: குன்றம்பூதனார்
இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்
பண் :: காந்தாரம்

கடவுள் வாழ்த்து

இமயத்தொடு நிகர்க்கும் குன்று

போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப,
கார் எதிர்ந்து ஏற்ற கமஞ் சூல் எழிலிபோல்,
நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து,
சூர், நிரந்து சுற்றிய, மா தபுத்த வேலோய்! நின்
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து,  5

ஏறுமாறு ஏற்கும் இக் குன்று.

தலைமகன் ஊடல் உணர்ப்பிக்கும் திறம்
ஒள் ஒளி மணிப் பொறி ஆல் மஞ்ஞை நோக்கித் தன்
உள்ளத்து நினைப்பானைக் கண்டனள், திரு நுதலும்:
உள்ளியது உணர்ந்தேன்; அது உரை இனி, நீ எம்மை
எள்ளுதல் மறைத்தல் ஓம்பு என்பாளைப் பெயர்த்து, அவன்,  10

காதலாய்! நின் இயல் களவு எண்ணிக் களி மகிழ்
பேதுற்ற இதலைக் கண்டு, யான் நோக்க, நீ எம்மை
ஏதிலா நோக்குதி என்று, ஆங்கு உணர்ப்பித்தல்
ஆய் தேரான் குன்ற இயல்பு.

பாணனுக்குத் தலைமகனது பரத்தைமை பற்றிக் கூறும் தலைமகளின் கூற்று

ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின்மேல்,  15

மை வளம் பூத்த மலர் ஏர் மழைக் கண்ணார்,
கை வளம் பூத்த வடு வொடு, காணாய் நீ?
மொய் வளம் பூத்த முயக்கம், யாம் கைப்படுத்தேம்:
மெய் வளம் பூத்த விழை தகு பொன் அணி--
நை வளம் பூத்த நரம்பு இயை சீர்ப் பொய் வளம்  20

பூத்தன--பாணா! நின் பாட்டு.

பரங்குன்றத்திலுள்ள அம்பலம்

தண் தளிர் தருப் படுத்து, எடுத்து உரைஇ,
மங்குல் மழை முழங்கிய விறல் வரையால்,
கண் பொருபு சுடர்ந்து, அடர்ந்து, இடந்து,
இருள் போழும் கொடி மின்னால்--  25

வெண் சுடர் வேல் வேள்! விரை மயில் வேல் ஞாயிறு!--நின்
ஒண் சுடர் ஓடைக் களிறு ஏய்க்கும் நின் குன்றத்து,
எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்.

குன்றத்துக் காட்சிகள்

ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி--  30

சூர் ததும்பும் வரைய காவால்,
கார் ததும்பு நீர் ததும்புவன சுனை,
ஏர் ததும்புவன பூ அணி செறிவு,
போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ--கார் தோற்றும்
காந்தள், செறிந்த கவின்,  35

கவின் முகை, கட்டு அவிழ்ப்ப, தும்பி; கட்டு யாழின்
புரி நெகிழ்ப்பார் போன்றன கை.
அச்சிரக்கால் ஆர்த்து--அணி மழை--கோலின்றே,
வச்சிரத்தான் வானவில்லு.

குன்றத்தின் சிறப்பு

வில்லுச் சொரி பகழியின், மென் மலர் தாயின--  40

வல்லுப் போர் வல்லாய்! மலைமேல் மரம்.
வட்டு உருட்டு வல்லாய்! மலைய--நெட்டுருட்டுச்
சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து,
போர் ததும்பும் அரவம் போல்,
கருவி ஆர்ப்ப, கருவி நின்றன--குன்றம்.  45

அருவி ஆர்ப்ப, முத்து அணிந்தன, வரை;
குருவி ஆர்ப்ப, குரல் குவிந்தன, தினை;
எருவை கோப்ப, எழில் அணி திருவில்
வானில் அணித்த, வரி ஊதும் பல் மலரால்,
கூனி வளைத்த--சுனை,  50

முருகவேளை வாழ்த்துதல்

புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து,
சுருதியும் பூவும் சுடரும் கூடி,
எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும்,
செரு வேற் தானைச் செல்வ! நின் அடி உறை,
உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்கு,  55

பிரியாது இருக்க--எம் சுற்றமோடு உடனே!

பரிபாடல் - 19. செவ்வேள்

பாடியவர் :: நப்பண்ணனார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: காந்தாரம்

கடவுள் வாழ்த்து

வள்ளியை முருகன் வதுவை கொண்டது

நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து,
புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து,
அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்
இரு நிலத்தோரும் இயைக! என, ஈத்த நின்
தண் பரங்குன்றத்து, இயல் அணி, நின் மருங்கு  5

சாறு கொள் துறக்கத்தவளொடு
மாறு கொள்வது போலும், மயிற்கொடி வதுவை.

கூடலார் பரங்குன்றை நோக்கி விடியலில் யாத்திரை செய்கின்ற வழி

புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்,
கலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை,
அறம் பெரிது ஆற்றி, அதன் பயன் கொண்மார்,  10

சிறந்தோர் உலகம் படருநர் போல,
உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி,
புரி மாண் புரவியர், போக்கு அமை தேரர்,
தெரி மலர்த் தாரர், தெரு இருள் சீப்ப, நின்
குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு--  15

நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய
தார் போலும், மாலைத் தலை நிறையால்--தண் மணல்
ஆர் வேலை யாத்திரை செல் யாறு.

பாண்டியன் தன் பரிவாரங்களுடன் பரங்குன்றை வலம் வரும் காட்சி

சுடரொடு சூழ்வரு தாரகை மேருப்
புடை வரு சூழல்--புலம் மாண் வழுதி  20

மட மயில் ஓரும் மனையவரோடும்,
கடன் அறி காரியக் கண்ணவரோடும்--நின்
சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல்
பாடு வலம் திரி பண்பின்-- பழ மதிச்
சூடி அசையும் சுவல்மிசைத் தானையின்,  25

பாடிய நாவின், பரந்த உவகையின்,
நாடும் நகரும் அடைய அடைந்தனைத்தே,
படு மணி யானை நெடியாய்! நீ மேய
கடி நகர் சூழ் நுவலுங்கால்.

குன்றின் கீழுள்ள இடை நிலம் பாசறையை ஒத்து விளங்கியமை

தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி,  30

வம்பு அணி பூங் கயிறு வாங்கி, மரன் அசைப்பார்--
வண் தார்ப் புரவி வழி நீங்க வாங்குவார்;
திண் தேர் வழியின் செல நிறுப்பார்--கண்டக்
கரும்பு கவழம் மடுப்பார்; நிரந்து
பரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே,  35

குருகு எறி வேலோய்! நின் குன்றக் கீழ் நின்ற
இடை நிலம்: யாம் ஏத்தும் ஆறு!

மலைச் சிறப்பு - வழுதியுடன் ஏறியோர் கண்டவை

குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்,
கரும்பு கருமுகக் கணக்கு அளிப்போரும்,
தெய்வப் பிரமம் செய்குவோரும்,  40

கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும்,
யாழின் இளி குரல் சமம் கொள்வோரும்,
வேள்லியின் அழகு இயல் விளம்புவோரும்;
கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப,
ஊழ் உறமுரசின் ஒலி செய்வோரும்;  45

என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்;
இரதி காமன், இவள் இவன் எனாஅ,
விரகியர் வினவ, வினா இறுப்போரும்;
இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன்  50

சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது என்று உரை செய்வோரும்:
இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,
துன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச்  55

சோபன நிலையது--துணி பரங்குன்றத்து
மாஅல் முருகன் மாட மருங்கு.

குன்றில் சுற்றத்தாரை விட்டுப் பிரிந்த சிறுமி

பிறந்த தமரின் பெயர்ந்து, ஒரு பேதை,
பிறங்கல் இடைஇடைப் புக்குப் பிறழ்ந்து, யான்
வந்த நெறியும் மறந்தேன்; சிறந்தவர்  60

ஏஎ, ஓஒ! என விளி ஏற்பிக்க,
ஏஎ, ஓஒ என்று ஏலா அவ் விளி
அவ் இசை முழை ஏற்று அழைப்ப, அழைத்துழிச்
செல்குவள் ஆங்குத் தமர்க் காணாமை
மீட்சியும், கூஉக் கூஉ மேவும் மடமைத்தே--  65

வாழ்த்து உவப்பான் குன்றின் வகை.

இள மகளிரின் மருட்சி

நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச்
சினை போழ் பல்லவன் தீம் சுனை உதிர்ப்ப,
உதிர்த்த சுனையின் எடுத்த தலைய
அலர் முகிழ் உற, அவை கிடப்ப,  70

தெரி மலர், நனை, உறுவ,
ஐந் தலை அவிர் பொறி அரவம்; மூத்த
மைந்தன்; அருகு ஒன்று மற்று-இளம் பார்ப்பு என
ஆங்கு இள மகளிர் மருள-- பாங்கர்,

குன்றம் விடியல் வானம் போலப் பொலிதல்

பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல்,  75

கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,
எருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை,
உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,
பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்;
நிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்க  80

மணந்தவை, போல, வரை மலை எல்லாம்
நிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்;
விடியல் வியல் வானம் போலப் பொலியும்--
நெடியாய்! நின் குன்றின்மிசை.

கன்னிமை கனிந்தாரும் மணமான மகளிரும்

தாம் செய்யும் பூசையில் யானையின் மிச்சிலை உண்ணுதல்
நின யானைச் சென்னி நிறம் குங்குமத் தால்  85

புனையா, பூ நீர் ஊட்டி, புனை கவரி சார்த்தா.
பொற் பவழப் பூங் காம்பின் பொற்குடை ஏற்றி,
மலிவுடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்,
பல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர்,
கன்னிமை கனிந்த காலத்தார், நின்  90

கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்--
மறு அற்ற மைந்தர் தோள் எய்தார்; மணந்தார்
முறுவல் தலையளி எய்தார்--நின் குன்றம்
குறுகிச் சிறப்பு உணாக்கால்.

முருகப் பெருமானை வாழ்த்துதல்

குறப் பிணாக் கொடியைக் கூடியோய்! வாழ்த்துச்  95

சிறப்பு உணாக் கேட்டி செவி.
உடையும் ஒலியலும் செய்யை; மற்று ஆங்கே
படையும் பவழக் கொடி நிறம் கொள்ளும்;
உருவும் உருவத் தீ ஒத்தி; முகனும்
விரி கதிர் முற்றா விரி சுடர் ஒத்தி;  100

எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து,
தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி,
அவ் வரை உடைத்தோய்! நீ இவ் வரை மருங்கில்
கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம்;
உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம், தொழுதே!  105

பரிபாடல் - 20. வையை

(பருவ வலின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு, தூது விடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்
பருவமும் வையை நீர் விழவணியும் கூறியது)

பாடியவர் :: நல்லந்துவனார்
இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்
பண் :: காந்தாரம்


புதுப் புனலையும் பல வகை மணங்களையும் உடன்கொண்டு வையை வருதல்

கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து,
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை
முற்றுபு முற்றுபு, பெய்து--சூல் முதிர் முகில்--
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக்
குருதிக் கோட்டு அழி கறை தெளி பெறக் கழீஇயின்று.  5

காலைக் கடல் படிந்து, காய் கதிரோன் போய வழி
மாலை மலை மணந்து, மண் துயின்ற கங்குலான்
வான் ஆற்றும் மழை தலைஇ; மரன் ஆற்றும் மலர் நாற்றம்,
தேன் ஆற்றும் மலர் நாற்றம், செறு வெயில் உறு கால
கான் ஆற்றும் கார் நாற்றம், கொம்பு உதிர்த்த கனி நாற்றம்;  10

தான், நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து, தரூஉம், வையை.
புதுப் புனலாட வைகறையில் மைந்தரும் மகளிரும் சென்ற வசை
தன் நாற்றம் மீது, தடம் பொழில் தான், யாற்று
வெந் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப,
ஊர்ஊர் பறை ஒலி கொண்டன்று; உயர் மதிலில்
நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ,  15

திண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும்,
வங்கப் பாண்டியில் திண் தேர் ஊரவும்,
வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும்,
கயமாப் பேணிக் கலவாது ஊரவும்,
மகளிர் கோதை மைந்தர் புனையவும்,  20

மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும்,
முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர்,
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல்
கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி,
மாட மறுகின் மருவி மறுகுற,  25

கூடல் விழையும் தகைத்து--தகை வையை.

தலைமகனது காதற்பரத்தையைத் தோழியர் கண்ட காலத்து நேர்ந்த நிகழ்ச்சி

புகை வகை தைஇயினார் பூங் கோதை நல்லார்,
தகை வகை தைஇயினார் தார்;
வகைவகை தைஇயினார் மாலை, மிகமிகச்
சூட்டும் கன்ணியும் மோட்டு வலையமும்  30

இயல் அணி, அணி நிற்ப ஏறி; அமர் பரப்பின்
அயல் அயல் அணி நோக்கி--ஆங்கு ஆங்கு வருபவர்
இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக,
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு,
நொந்து, அவள் மாற்றாள் இவள் என நோக்க,  35

தலைமகனது முகமாற்றமும், கூட்டத்துள் பரத்தை மறைதாம்

தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின்;
செருச் செய்த வாளி சீற்றத்தவை அன்ன
நேர் இதழ் உண்கணார் நிரை காடாக,
ஓடி ஒளித்து, ஒய்யப் போவாள் நிலை காண்மின்.
தன்னைத் தொடர்ந்த ஆயத்தாரோடு பரத்தை உரைத்தல்
என--ஆங்கு,  40

ஒய்யப் போவாளை, உறழ்த்தோள் இவ் வாணுதல்
வையை மடுத்தால் கடல் எனத் தெய்ய
நெறி மணல் நேடினர் செல்ல, சொல் ஏற்று,
செறி நிரைப் பெண் --வல் உறழ்பு--யாது தொடர்பு? என்ன
மறலினாள், மாற்றாள் மகள்.  45

தலைமகளின் திகைப்பு

வாய் வாளா நின்றாள்,
செறிநகை சித்தம் திகைத்து.

ஆயத்தார் பரத்தையை நோக்கி வைது உரைத்தல்

ஆயத்து ஒருத்தி, அவளை, அமர் காமம்
மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை!
பெண்மைப் பொதுமைப் பிணையிலி! ஐம் புலத்தைத்  50

துற்றவ துற்றும் துணை இதழ் வாய்த் தொட்டி!
முற்றா நறு நறா மொய் புனல் அட்டி,
காரிகை நீர் ஏர் வயல், காமக் களி நாஞ்சில்,
மூரி தவிர முடுக்கு முது சாடி!
மட மதர் உண்கண் கயிறாக வைத்துத்  55

தட மென் தோள் தொட்டு, தகைத்து, மட விரலால்
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில், எம் இழையைத்
தொட்டு, ஆர்த்தும் இன்பத் துறைப் பொதுவி! கெட்டதைப்
பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து, இவ்
வையைத் தொழுவத்துத் தந்து, வடித்து, இடித்து,  60

மத்திகை மாலையா மோதி, அவையத்துத்
தொடர்ந்தேம்--எருது தொழில் செய்யாது ஓட
விடும் கடன் வேளாளர்க்கு இன்று-படர்ந்து, யாம்,
தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும்,
நின் மார்பும், ஓர் ஒத்த நீர்மைய கொல்? என்னாமுன்--  65

பரத்தை ஏசுதலைக் கண்ட முதுமகளிர் கூற்று

தேடினாள் ஏச, சில மகளிர் மற்று அதற்கு
ஊடினார், வையையகத்து,
சிந்திக்க தீரும் பிணியாட் செறேற்க;
மைந்து உற்றாய், வெஞ் சொல்; மட மயிற் சாயலை
வந்திக்க வார் என --- மனத் தகக நோய் இது;  70

பரத்தையின் பதில் உரை

வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு;
போற்றாய் காண், அன்னை! புரையோய்! புரை இன்று,
மாற்றாளை மாற்றாள் வரவு.

தலைவி கூற்று

அ... சொல் நல்லவை நாணாமல்
தந்து முழவின் வருவாய்! நீ வாய்வாளா;  75

எந்தை எனக்கு ஈத்த இடு வளை, ஆரப் பூண்
வந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல்,
தந்தானைத் தந்தே, தருக்கு.

பரத்தையின் மறுமொழி

மாலை அணிய விலை தந்தான்; மாதர் நின்
கால சிலம்பும் கழற்றுவான்; சால,  80

அதிரல் அம் கண்ணி! நீ அன்பன் எற்கு அன்பன்;
கதுவாய்; அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்.
என ஆங்கு--

கண்டார் சிலருடைய கூற்று

பரத்தையை நோக்கி உரைத்தல்
வச்சிய மானே! மறலினை மாற்று; உமக்கு
நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே.  85

தலைமகளுக்கு முனிவி நீங்க உரைத்தல்

சேக்கை இனியார்பால் செல்வான் மனையாளால்
காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ? கூடா;
தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
இகழினும், கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்;
நிகழ்வது அறியாது--நில்லு நீ, நல்லாய்!  90

மகளிரை மைந்துற்று அமர்பு உற்ற மைந்தர்
அகலம் கடிகுவேம் என்பவை யார்க்கானும்
முடி பொருள் அன்று--முனியல்!
கட வரை நிற்குமோ காமம்? கொடி இயலாய்!
வையை நீர் மலர்களுடன் வந்து கூடல் மதிலின்
கருங்கை வழியே பாயும் காட்சி
என--ஆங்கு  95

இன்ன துணியும் புலவியும் ஏற்பிக்கும்,
தென்னவன் வையைச் சிறப்பு,
கொடி இயலார் கைபோல் குவிந்த முகை,
அரவு உடன்றவைபோல் விரிந்த குலை,
குடை விரிந்தவை போலக் கோலும் மலர்,  100

சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர்,
சினை விரிந்து உதிர்ந்த வீ, புதல் விரி போதொடும்,
அருவி சொரிந்த திரையின் துரந்து;
நெடு மால் கருங்கை நடு வழிப் போந்து--
கடு மா களிறு அணைத்துக் கைவிடு நீர் போலும்--  105

நெடு நீர் மலி புனல், நீள் மாடக் கூடல்
கடி மதில் பெய்யும் பொழுது.

பிரிந்தாரைக் கூட்டுவித்தல் வையைக்கு இயல்பு

நாம் அமர் உடலும் நட்பும், தணப்பும்,
காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட,
தாம் அமர் காதலரொடு ஆடப் புணர்வித்தல்  110

 
மேலும் பரிபாடல் »
temple news
பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. 70 பாடல்களில் 22 ... மேலும்
 
பரிபாடல் - உரைச்சிறப்புப் பாயிரம் (நிலைமண்டில ஆசிரியப்பா) கண்ணுதற் கடவு ளண்ணலங் குறுமுனிமுனைவேன் ... மேலும்
 
பரிபாடல் - 5. செவ்வேள் பாடியவர் :: கடுவன் இளவெயினனார்இசையமைத்தவர் :: கண்ணனாகனார்பண் :: பாலையாழ் பாய் இரும் ... மேலும்
 
தலைமகளிரது செய்தி வளி பொரு சேண் சிமை வரையகத்தால்  90 தளி பெருகும் தண் சினையபொழில் கொளக் குறையா ... மேலும்
 
பூ மலி வையைக்கு இயல்பு. பரிபாடல் - 21. செவ்வேள் பாடியவர் :: நல்லச்சுதனார்இசையமைத்தவர் :: கண்ணகனார்பண் :: ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar