அவதரித்தல் என்பதற்கு இறங்குதல் என்று பொருள். வைகுண்டத்தில் இருக்கும் மகாவிஷ்ணு சில அவதாரங்கள் எடுத்து பூமிக்கு இறங்கி வந்தார். அவதாரம் செய்யாமல் அங்கிருந்தபடியே தீயவர்களை அவரால் அழித்துவிடமுடியும். இருந்தாலும், துஷ்ட நிக்ரஹம் செய்வதை விட, சிஷ்ட பரிபாலனமாகிய நல்லவர்களைக் காக்கும் செயலை தானே நேரடியாகச் செய்ய எண்ணி மண்ணுலகிற்கு வந்தார். அவரைப் பார்த்து உலகில் வாழும் மற்ற மக்களும் தர்மங்களை கடைபிடிக்க எண்ணினார். நல்லவர்களைக் காத்தல், தீயவர்களை அழித்தல், தர்மத்தை நிலைநாட்டல் ஆகிய மூன்றுவித லட்சியங்கள் ஒவ்வொரு அவதாரத்திற்கும் உண்டு.