Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புகழ் பகுதி-11
முதல் பக்கம் » திருப்புகழ்
திருப்புகழ் பகுதி-12
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 மார்
2013
05:03

561. காணாத தூர நீணாத வாரி
காதார வாரம  தன்பினாலே
காலாளும் வேளும் ஆலால நாதர்
காலால் நிலாவுமு  னிந்துபூமேல்

நாணான தோகை நூலாடை சோர
நாடோர்க ளேசஅ  ழிந்துதானே
நானாப வாத மேலாக ஆக
நாடோறும் வாடிம  யங்கலாமோ

சோணாச லேச பூணார நீடு
தோளாறு மாறும்வி  ளங்குநாதா
தோலாத வீர வேலால டாத
சூராளன் மாளவெ  குண்டகோவே

சேணாடர் லோகம் வாழ்மாதி யானை
தீராத காதல்சி  றந்தமார்பா
தேவாதி கூடு மூவாதி மூவர்
தேவாதி தேவர்கள்  தம்பிரானே.

562. காரா டக்குழ லாலா லக்கணை
கண்கள் சுழன்றிட வேமு கங்களி
னாலா பச்சிலை யாலே மெற்புசி
மஞ்சள் கலந்தணி வாளி கொந்தள
காதா டக்கலன் மேலா டக்குடி
யின்ப ரசங்குட மார்ப ளிங்கொளி  கொங்கைமாதர்

காசா சைச்செய லாலே சொக்கிடு
விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்
போலே நற்றெரு வூடா டித்துயல்
தொங்கல் நெகிழ்ந்திடை யேது வண்டிட
கால்தா விச்சதி யோடே சித்திர
மென்ப நடம்புரி வாரு டன்செயல்  மிஞ்சலாகிச்

சீரா டிச்சல நாள்போய் மெய்த்திரை
வந்து கலந்துபி ரோட வங்கமொ
டூடா டிப்பல நோயோ டுத்தடி
கொண்டு குரங்கென வேந டந்துசொல்
சீயோ டிக்கிடை பாயோ டுக்கிய
டங்கி யழிந்துயி ரோடு ளைஞ்சொளி  யுங்கண்மாறிச்

சேரா மற்பொறி கேளா மற்செவி
துன்பமொ டின்பமு மேம றந்துபின்
ஊரார் சுற்றமு மாதோர் மக்களு
மண்டியு மண்டையு டேகு விந்திது
சீசீ சிச்சிசி போகா நற்சனி
யன்கட வென்றிட வேகி டந்துடல்  மங்குவேனோ

மாரோன் முப்புர நீறா யுற்றிட
அங்கி யுமிழ்ந்திடு வோரி பம்புலி
தோல்சீ யத்தொடெ யேகா சர்ச்சடை
கங்கை யிளம்பிறை யார ணிந்தவர்
மாடே றிக்கட லாலா லத்தையு
முண்டவரெந்தை சிவாநு பங்குறை  யென்றன்மாதா

மாலோ னுக்கிளை யாள்மா பத்தினி
யம்பிகை சங்கரி மோக சுந்தரி
வேதா மக்கலை ரூபாள் முக்கணி
ரம்பிய கொங்கையி னாள்ப யந்தருள்
மாஞா னக்கும ராதோ கைப்பரி
யின்பத வண்குரு வேயெ னஞ்சுரர்  தொண்டுபாடச்

சூரார் மக்கிட மாமே ருக்கிட
அங்கட லெண்கிரி யோடி பங்கொடு
தீபே ழற்றிட பாதா ளத்துறை
நஞ்சர வின்பண மாயி ரங்கெட
சூழ்வா ளக்கிரி தூளா கிப்பொடி
விண்கணி றைந்திட வேந டம்புரி  கின்றவேலா

சோர்வே தத்தலை மேலா டிச்சுக
பங்கய செங்கர மோட கம்பெற
வாகா னக்குற மாதோ டற்புத
மங்குல ணங்குட னேம கிழ்ந்துநல்
தூணோ டிச்சுட ராகா சத்தைய
ணைந்துவி ளங்கரு ணாச லந்திகழ்  தம்பிரானே

563. காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய
காகளம டங்கவுமு  ழங்கு மதனாலே
காலடர வம்பமளி மேலடர வந்துபொரு
காமன்விடு விஞ்சுகணை  அஞ்சு மலராலே

ஊருமுல கும்பழைய பேருகம்வி ளைந்ததென
ஓரிரவு வந்தெனது  சிந்தை யழியாதே
ஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமு
லாவிய டம்பமலர்  தந்த ருளுவாயே

ஆருமர வும்பிறையு நீருமணி யுஞ்சடைய
ராதிபர வும்படிநி  னைந்த குருநாதா
ஆறுமுக முங்குரவு மேறுமயி லுங்குறவி
யாளுமுர முந்திருவும்  அன்பு முடையோனே

மேருமலை யும்பெரிய சூருமலை யுங்கரிய
வேலையலை யும்பகையும்  அஞ்ச விடும்வேலா
மேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிரு
வீதியிலெ ழுந்தருளி  நின்ற பெருமாளே.

564. கீத விநோத மெச்சு  குரலாலே
கீறு மையார் முடித்த  குழலாலே
நீதி யிலாத ழித்து  முழலாதே
நீமயி லேறி யுற்று  வரவேணும்
சூதமர் சூர ருட்க  பொருசூரா
சோண கிரீயி லுற்ற  குமரேசா
ஆதியர் காதொ ருச்சொ  லருள்வோனே
ஆனை முகார்க னிட்ட  பெருமாளே.

565. குரவநறு மளககுழல் கோதிக் காட்டியெ
குலவுமிரு கயல்கள்விழி மோதித் தாக்கியெ
குமுதமல ரொளிபவள வாயைக் காட்டியெ  குழையாத
குணமுறுக இனிதுபயில் கூறிக் காட்டியெ
குலையஇரு கலைநெகிழ வீசிக் காட்டியெ
குடவியிடு மரிவையர்க ளாசைப் பாட்டிலெ  கொடியேன்யான்

பொருளிளமை கலைமனமு மேகப் போக்கிய
புலையனிவ னெனவுலக மேசப் போக்கென
பொறிவழியி லறிவழிய பூதச் சேட்டைகள்  பெருகாதே
புதுமலர்கள் மருவுமிரு பாதத் தாற்றியெ
பொதுவகையி லருணைநிலை  நீள்கர்த் தாத்தென
புகழடிமை தனையுனது பார்வைக் காத்திட  நினையாதோ

அரவமுட னறுகுமதி யார்மத் தாக்கமு
மணியுமொரு சடைமவுலி நாதர்க் கேற்கவெ
அறிவரிய வொருபொருளை போதத் தேற்றிய  அறிவோனே
அழகுசெறி குழலியர்கள் வானத் தாட்டியர்
தருமமுது சரவணையில் வாவித் தேக்கியெ
அறுசிறுவ ரொருவுடல மாகித் தோற்றிய  இளையோனே

சுரருலவ அசுரர்கள் மாளத் தூட்பட
துயவுமுட லயிலைவிடு மாவுக் ராக்ரம
சுவறியெழு கடலுமுறை யாகக் கூப்பிட  முனிவோனே
துடிமுழவு மறவரிட சேவற் காட்டினில்
துணைமலரி னணுகிதினை காவற் காத்தனை
கரியகுழல் குறமகளை வேளைக் காத்தணை  பெருமாளே.

566. குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலி
குலவனு மாய்நாடு காடொடு  தடுமாறிக்
குனிகொடு கூனீடு மாகிடு கிழவனுமாயாவிபோய்விட
விறகுடனே தூளி யாவது  மறியாதாய்ப்

பழயச டாதார மேனிகழ் கழியுடல் காணா நிராதர
பரிவிலி வானாலை நாடொறு  மடைமாறிப்
பலபல வாம்யோக சாதக வுடல்கொடு மாயாதபோதக
பதியழி யாவீடு போயினி  யடைவேனோ

எழுகடல் தீமுள மேருவு மிடிபட வேதாவும் வேதமு
மிரவியும் வாய்பாறி யோடிட  முதுசேடன்
இருளறு பாதாள லோகமு மிமையமு நீறாக வாள்கிரி
யிருபிள வாய்வீழ மாதிர  மலைசாய

அழகிய மாபாக சாதன னமரரு மூர்பூத மாறுசெய்
அவுணர்த மாசேனை தூளெழ  விளையாடி
அமரினை மேவாதசூரரை அமர்செயும் வேலாயுதாவுயர்
அருணையில் வாழ்வாக மேவிய  பெருமாளே.

567. கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று
கேவலம தான அற்ப  நினைவாலே
கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த
கேடுறுக வேநினைக்கும்  வினையாலே

வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில்
மேதினியெ லாமுழற்று  மடியேனை
விடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து
வீறுமயில் மீதிலுற்று  வருவாயே

நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்து
நீடுபுகழ் தேவரிற்கள்  குடியேற
நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்த
நீலநிற மால்தனக்கு  மருகோனே

சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள்
சோபைவட கோபுரத்தி  லுறைவோனே
சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி
தோளின்மிசை வாளெடுத்த  பெருமாளே.

568. கோடான மடவார்கள்  முலைமீதே
கூர்வேலை யிணையான  விழியூடே
ஊடாடி யவரோடு  முழலாதே
ஊராக திகழ்பாத  மருள்வாயே
நீடாழி சுழல்தேசம்  வலமாக
நீடோடி மயில்மீது  வருவோனே
சூடான தொருசோதி  மலைமேவு
சோணாடு புகழ்தேவர்  பெருமாளே.

569. கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்தி
கூறுசெய்த ழித்து ரித்து  நடைமாணார்
கோளுலவு முப்பு ரத்தை வாளெரிகொ ளுத்தி விட்ட
கோபநுத லத்த ரத்தர்  குருநாதா

நீடுகன கத்த லத்தை யூடுருவி மற்ற வெற்பு
நீறெழமி தித்த நித்த  மனதாலே
நீபமலர் பத்தி மெத்த வோதுமவர் சித்த மெத்த
நீலமயில் தத்த விட்டு  வரவேணும்

ஆடலணி பொற்சி லைக்கை வேடுவர்பு னக்கு றத்தி
ஆரமது மெத்து சித்ர  முலைமீதே
ஆதரவு பற்றி மெத்த மாமணிநி றைத்த வெற்றி
ஆறிருதி ருப்பு யத்தில்  அணைவீரா

தேடிமையொர் புத்தி மெத்தி நீடுறநி னைத்த பத்தி
சீருறவு ளத்தெ ரித்த  சிவவேளே
தேறருணை யிற்ற ரித்த சேண்முகடி டத்த டர்த்த
தேவர்சிறை வெட்டி விட்ட  பெருமாளே.

570. சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்கும
திலதமு மிட்டுக் குளிர்ந்த பங்கய
திருமுக வட்டத் தமர்ந்த மென்குமிழ்  தனிலேறிச்
செழுமணி ரத்நத் திலங்கு பைங்குழை
தனைமுனி வுற்றுச் சிவந்து நஞ்சணி
செயலினை யொத்துத் தயங்கு வஞ்சக  விழிசீறிப்

புலவிமி குத்திட் டிருந்த வஞ்சியர்
பதமல ருக்குட் பணிந்த ணிந்தணி
புரிவளை கைக்குட் கலின்க லென்றிட  அநுராகம்
புகழ்நல மெத்தப் புரிந்து கொங்கையி
லுருகிய ணைத்துப் பெரும்ப்ரி யங்கொடு
புணரினும் நிற்பொற் பதங்கள் நெஞ்சினுள்  மறவேனே

கலைமதி வைத்துப் புனைந்து செஞ்சடை
மலைமகள் பக்கத் தமர்ந்தி ருந்திட
கணகண கட்கட் கணின்க ணென்றிட  நடமாடும்
கருணைய னுற்றத் த்ரியம்ப கன்தரு
முருகபு னத்திற் றிரிந்த மென்கொடி
கனதன வெற்பிற் கலந்த ணைந்தருள்  புயவீரா

அலைகடல் புக்குப் பொரும்பெ ரும்படை
யவுணரை வெட்டிக் களைந்து வென்றுயர்
அமரர்தொ ழப்பொற் சதங்கை கொஞ்சிட  வருவோனே
அடியவ ரச்சத் தழுங்கி டுந்துயர்
தனையொழி வித்துப் ப்ரியங்கள் தந்திடும்
அருணகி ரிக்குட் சிறந்த மர்ந்தருள்  பெருமாளே.

571. சிவமா துடனே அநுபோ கமதாய்
சிவஞா னமுதே  பசியாறித்
திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய்
திகைலோ கமெலா  மநுபோகி

இவனே யெனமா லயனோ டமரோ
ரிளையோ னெனவே  மறையோத
இறையோ னிடமாய் விளையா டுகவே
யியல்வே லுடன்மா  அருள்வாயே

தவலோ கமெலா முறையோ வெனவே
தழல்வேல் கொடுபோ  யசுராரைத்
தலைதூள் படஏழ் கடல்தூள் படமா
தவம்வாழ் வுறவே  விடுவோனே

கவர்பூ வடிவாள் குறமா துடன்மால்
கடனா மெனவே  அணைமார்பா
கடையேன் மிடிதூள் படநோய் விடவே
கனல்மால் வரைசேர்  பெருமாளே.

572. சினமுடுவல் நரிகழுகு டன்பருந் தின்கணங்
கொடிகெருடன் அலகைபுழு வுண்டுகண் டின்புறுஞ்
செடமளறு மலசலமொ டென்புதுன் றுங்கலந்  துன்பமேவு
செனனவலை மரணவலை ரண்டுமுன் பின்தொடர்ந்
தணுகுமுட லநெகவடி விங்கடைந் தம்பரஞ்
சிறுமணலை யளவிடினு மங்குயர்ந் திங்குலந்  தொன்றுநாயேன்

கனகபுவி நிழல்மருவி யன்புறுந் தொண்டர்பங்
குறுகஇனி யருள்கிருபை வந்துதந் தென்றுமுன்
கடனெனது உடலுயிரு முன்பரந் தொண்டுகொண்  டன்பரோடே
கலவிநல மருவிவடி வஞ்சிறந் துன்பதம்
புணர்கரண மயில்புறமொ டின்புகொண் டண்டருங்
கனகமலர் பொழியஉன தன்புகந் தின்றுமுன்  சிந்தியாதோ

தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடந்
தவில்முரசு பறைதிமிலை டிங்குடிங் குந்தடர்ந்  தண்டர்பேரி
தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண்
டிமிடிமிட டிகுர்திகுகு சங்குவெண் கொம்புதிண்
கடையுகமொ டொலியகட லஞ்சவஞ் சன்குலஞ்  சிந்திமாளச்

சினமுடுகி அயிலருளி யும்பரந் தம்பரந்
திகையுரகர் புவியுளது மந்தரம் பங்கயன்
செகமுழுது மகிழஅரி அம்புயன் தொண்டுகொண்  டஞ்சல்பாடத்
திருமுறுவ லருளியென தெந்தையின் பங்குறுங்
கவுரிமுன முருகவொரு கங்கைகண் டன்புறுந்
திருவருண கிரிமருவு சங்கரன் கும்பிடுந்  தம்பிரானே.

573. சுக்கி லச்சுரொணி தத்தி லுற்றுநளி
னத்தி லப்புவென ரத்த முற்றிசுக
சுக்கி லக்குளிகை யொத்து கெர்ப்பகுகை  வந்துகோலத்
தொப்பை யிட்டவயி றிற்பெ ருத்துமிக
வட்ட மிட்டுடல் வெப்ப முற்றுமதி
சொற்ற பத்தின்மறி யக்ஷ ரத்தினடை  விஞ்சையாலே

கக்க நற்புவியி லுற்ற ரற்றிமுலை
யைக்கொ டுக்கவமுர் தைப்பு சித்துவளர்
கைக்க சத்தியொடு ழைத்து தத்துநடை  அந்தமேவிக்
கற்று வெற்றறிவு பெற்று தொக்கைமயி
லொத்த மக்கள்மய லிற்கு ளித்துநெறி
கட்டி யிப்படிபி றப்பி லுற்றுடல்  மங்குவேனோ

தெற்க ரக்கர்பவி ஷைக்கு லைத்துவிட
ணற்கு நத்தரச ளித்து முத்திகொடு
சித்தி ரத்திருவு ரத்த சக்கிரிதன்  மருகோனே
செக்க ரத்தின்மலை முப்பு ரத்திலெரி
யிட்ட சத்திசிவ னுற்று நத்தமிகு
சித்தனைத்தையும்வி ழித்தசத்தியுமை  தந்தபாலா

தர்க்க மிட்டசுர ரைக்கெ லித்துமலை
யுக்கெ ழுக்கடல்கொ ளுத்தி அட்டதிசை
தட்ட முட்டையடை யக்கொ டிப்புகையின்  மண்டும்வேலா
தத்தை வித்ருமநி றத்தி முத்தணிகு
றத்தி கற்பகவ னத்தி சித்தமவை
தக்கு நத்தஅரு ணைக்கி ரிக்குள்மகிழ்  தம்பிரானே.

574. செஞ்சொற் பண்பெற் றிடுகுட மாமுலை
கும்பத் தந்திக் குவடென வாலிய
தெந்தப் பந்தித் தரளம தாமென  விடராவி
சிந்திக் கந்தித் திடுகளை யாமுன
தங்கத் தம்பொற் பெதுவென வோதுவ
திண்டுப் புந்தித் திடுகனி தானுமு  னிதழாமோ

மஞ்சொக் குங்கொத் தளகமெ னாமிடை
கஞ்சத் தின்புற் றிடுதிரு வேயிள
வஞ்சிக் கொம்பொப் பெனுமயி லேயென  முறையேய
வந்தித் திந்தப் படிமட வாரொடு
கொஞ்சிக் கெஞ்சித் தினமவர் தாடொழு
மந்தப் புந்திக் கசடனெ நாளுன  தடிசேர்வேன்

நஞ்சைக் கண்டத் திடுபவ ராரொடு
திங்கட் பிஞ்சக் கரவணி வேணியர்
நம்பர்ச் செம்பொற் பெயரசு ரேசனை  யுகிராலே
நந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வர
நந்திக் கம்பத் தெழுநர கேசரி
நஞ்சக் குண்டைக் கொருவழி யேதென  மிகநாடி

வெஞ்சச் சிம்புட் சொருபம தானவர்
பங்கிற் பெண்கற் புடையபெ ணாயகி
விந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர்  புனமீதே
வெண்டித் தங்கித் திரிகிழ வாவதி
துங்கத் துங்கத் கிரியரு ணாபுரி
வெங்கட் சிங்கத் தடிமயி லேறிய  பெருமாளே.

575. செயசெய அருணாத் திரிவிச யநமச்
செயசெய அருணாத் திரிமசி வயநச்
செயசெய அருணாத் திரிநம சிவயத் திருமூலா
செயசெய அருணாத் திரியந மசிவச்
செயசெய அருணாத் திரிவய நமசிச்
செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் தெனமாறி

செயசெய அருணாத் திரிதனில் விழிவைத்
தரகர சரணாத் திரியென உருகிச்
செயசெய குருபாக் கியமென மருவிச் சுடர்தாளைச்
சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்
சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்
திருவடி சிவவாக் கியகட லமுதைக் குடியேனோ

செயசெய சரணாத் திரியென முநிவர்க்
கணமிது வினைகாத் திடுமென மருவச்
செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் சுடும்வேலா
திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்
கடிதலை தெரியாப் படிநிண அருணச்
சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் புகல்வோனே

செயசெய சரணாத் திரியெனு மடியெற்
கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்
றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் குருநாதா
திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்
குறமகள் முலைமேற் புதுமண மருவிச்
சிவகிரி யருணாத் திரிதல மகிழ்பொற்  பெருமாளே.

576. தமரகு ரங்களுங் காரி ருட்பி ழம்பு
மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்து
தழலுமிழ் கண்களுங் காள மொத் கொம்பு முளகதக்  கடமாமேல்
தனிவரு மந்தகன் பாசம் விட்டெறிந்து
அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து
தமரழ மைந்தருஞ் சோக முற்றிரங்க மரணபக்  குவமாநாள்

கமலமு கங்களுங் கோம ளத்தி லங்கு
நகையு நெடுங்கணுங் காதி னிற்று லங்கு
கனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்க தமுமடற்  சுடர்வேலுங்
கடிதுல கெங்கணுந் தாடி யிட்டு வந்த
மயிலுமி லங்கலங் கார பொற்ச தங்கை
கழலொலி தண்டையங் காலு மொக்க வந்து வரமெனக் கருள்கூர்வாய்

இமகிரி வந்தபொன் பாவை பச்சை வஞ்சி
அகில தலம்பெறும் பூவை சத்தி யம்பை
யிளமுலை யின்செழும் பால்கு டித்தி லங்கு மியல்நிமிர்த் திடுவோனே

இறைவ ரிறைஞ்சநின் றாக மப்ர சங்க
முரைசெய் திடும்ப்ரசண் டாவி சித்து நின்ற
ரணமுக துங்கவெஞ் சூரு டற்பி ளந்த அயிலுடைக்  கதிர்வேலா

அமண ரடங்கலுங் கூட லிற்றி ரண்டு
கழுவி லுதைந் துதைந் தேற விட்டு நின்ற
அபிநவ துங்ககச் காந திக்கு மைந்த அடியவர்க கெளியோனே
அமரர் வணங்குகந் தாகு றத்தி கொங்கை
தனில்முழு குங்கடம் பாமி குத்த செஞ்சொ
லருணை நெடுந்தடங் கோபு ரத்த மர்ந்த அறுமுகப்  பெருமாளே.

577. தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங்
கிளிகாடையி னணிலேரளி யாங்குரல் வாய்ந்ததிசெந்
தகுமாமிட றொலியாரித ழாஞ்சுளை தேன்கனியின்  சுவைசேருந்
தனபாரமு மலையாமென வோங்கிட மாம்பொறிசிந்
திடவேல்விழி நுதலோசிலை வான்பிறை மாந்துளிரின்
சரிரர்குழ லிருளாநகை யோங்கிய வான்கதிரின்  சுடர்பாயக்

குமிழ்நாசியின் முகமோமதி யாங்குளிர் சேங்கமலஞ்
சரிதோடிணை செவியாடுச லாங்கள பூங்கமுகங்
கொடிநூலிடை யுடையாரன மாம்ப்ரியர் மாண்புரிமின்  கொடிமாதர்
குணமோடம ளியினாடினு மோங்கிய பூங்கமலஞ்
சரணூபுர குரலோசையு மோந்திடு மாண்டலையின்
கொடியோடெழு தரிதாம்வடி வோங்கிய பாங்கையுன்  தகையேனே

திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந்
தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந்
திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகமென் றியல்பேரி
திசைமுடுக கடலேழ்பொடி யாம்படி யோங்கியவெங்
கரிதேர்பரி யசுரர்கள் மாண்டிட நீண்டரவின்
சிரமீள்பட குவடோதுகள் வான்பெற வாங்கியவண் கதிர்வேலா

கமழ்மாவிதழ் சடையாரடி யேன்துயர் தீர்ந்திடவெண்
தழல்மாபொடி யருள்வோரடல் மான்துடி தாங்கியவன்
கரர்மாடரு ளுமையாளெமை யீன்றவ ளீன்றருள்மென் குரவோனே

கடையேனிரு வினைநோய்மல மாண்டிட தீண்டியவொண்
சுகமோகினி வளிநாயகி பாங்கனெ னாம்பகர்மின்
கலைநூலுடை முருகாவழ லோங்கிய வோங்கலின்வண்  பெருமாளே.

578. தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்து
சடையை வளர்த்துப் புரிந்து  புலியாடை
சதிரொ டுவப்பப் புனைந்து விரகொ டுகற்கப் புகுந்து
தவமொ ருசத்தத் தறிந்து  திருநீறு

கலையை மிகுத்திட் டணிந்து கரண வலைக்குட் புகுந்து
கதறு நிலைக்கைக் கமர்ந்த  எழிலோடே
கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து
கவலை யொழித்தற்  கிரங்கி  யருள்வாயே

அலைக டலிற்கொக் கரிந்து மருவரை யைப்பொட் டெறிந்து
மமரு லகத்திற் புகுந்து  முயரானை
அருளொ டுகைப்பற றிவந்து மருண கிரிப்புக் கிருந்து
மறிவு ளபத்தர்க் கிரங்கு  மிளையோனே

மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து
வறிது நகைத்திட் டிருந்த  சிவனார்தாம்
மதலை புனத்திற் புகுந்து டிவுற்றுத் திரிந்து
மறம யிலைச்சுற் றிவந்த  பெருமாளே.

579. திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்
மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள்
செகத்து நீலிகள் கெட்டப ரத்தைகள்  மிகநாணார்
சிலைக்கு நேர்புரு வப்பெரு நெற்றிக
ளெடுப்பு மார்பிக ளெச்சிலு தட்டிகள்
சிரித்து மானடர் சித்தமு ருக்கிகள்  விழியாலே

வெருட்டி மேல்விழு பப்பற மட்டைகள்
மிகுத்த பாவிகள் வட்டமு கத்தினை
மினுக்கி யோலைகள் பித்தளை யிற்பணி  மிகநீறால்
விளக்கி யேகுழை யிட்டபு ரட்டிகள்
தமக்கு மால்கொடு நிற்கும ருட்டனை
விடுத்துநானொரு மித்திரு பொற்கழல்  பணிவேனோ

தரித்த தோகண தக்கண செக்கண
குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
தகுத்த தீதிகு தக்குகு திக்குகு  எனதாளந்
தடக்கை தாளமு மிட்டியல் மத்தள
மிடக்கை தாளமு மொக்க டித்தொளி
தரித்த கூளிகள் தத்திமி தித்தென  கணபூதம்

அருக்க னாரொளி யிற்ப்ரபை யுற்றிடு
மிரத்ந மாமுடி யைக்கொடு கக்கழ
லடக்கை யாடிநி ணத்தையெ டுத்துண  அறவேதான்
அரக்கர் சேனைகள் பட்டுவி ழச்செறி
திருக்கை வேல்தனை விடடரு ளிப்பொரும்
அருட்டு காவரு ணைப்பதி யுற்றருள்  பெருமாளே.

580. தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு
தேனளி சூழ மொய்த்த  மலராலே
சீறும ராவெ யிற்றி லூறிய காளம் விட்ட
சீத நிலாவெ றிக்கு  மனலாலே

போதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்ட
போர்மத ராஜ னுக்கு  மழியாதே
போகமெ லாநி றைத்து மோக விடாய்மி குத்த
பூவையை நீய ணைக்க  வரவேணும்

மாதினை வேணி வைத்த நாதனு மோது பச்சை
மாயனு மாத ரிக்கு  மயில்வீரா
வானவர்  சேனை முற்றும் வாழம ராப திக்குள்
வாரண மான தத்தை  மணவாளா

மேதினி யோர்த ழைக்க வேயரு ணாச லத்து
வீதியின் மேவி நிற்கு  முருகோனே
மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில்
வேலடை யாள மிட்ட  பெருமாளே.

581. தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு
தோகை யர்க்கு நெஞ்ச  மழியாதே
சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று
சூழ்பி ணிக்க ணங்க  ளணுகாதே

பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து
பாசம் விட்டெறிந்து  பிடியாதே
பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த
பாடல் மிக்க செஞ்சொல்  தரவேணும்

வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப
வீர பத்ர கந்த  முருகோனே
மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து
வேலை யிற்றொ ளைந்த  கதிர்வேலா

கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த
கோம ளக்கு ரும்பை  புணர்வோனே
கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த
கோபு ரத்த மர்ந்த  பெருமாளே.

582. பாண மலரது தைக்கும்  படியாலே
பாவி யிளமதி கக்குங்  கனலாலே
நாண மழிய வுரைக்குங்  குயிலாலே
நானு மயிலி லிளைக்குந்  தரமோதான்
சேணி லரிவை யணைக்குந்  திருமார்பா
தேவர் மகுட மணக்குங்  கழல்வீரா
காண அருணையில் நிற்குங்  கதிர்வேலா
காலன் முதுகை விரிக்கும்  பெருமாளே.

583. பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
பாகாய் வாய்சொற்  கொடியார்தாம்
பாடா வாடா வேடா வாலே
பாடா யீட்ற்  றிடைபீறுந்

தோலா லேகா லாலே யூனா
லேசூழ் பாசக்  குடில்மாசு
தோயா மாயா வோயா நோயால்
சோர்வாய் மாளக்  கடவேனோ

ஞாலா மேலா வேதா போதா
நாதா சோதிக்  கிரியோனே
ஞானா சாரா வானாள் கோனே
நானா வேதப்  பொருளோனே

வேலா பாலா சீலா காரா
வேளே வேடக்  கொடிகோவே
வீரா தாரா ஆறா தாரா
வீரா வீரப்  பெருமாளே.

584. புணர்முலை மடந்தை மாதர் வலையினி லுழன்ற நேக
பொறியுட லிறந்து போன  தளவேதுன்
புகழ்மறை யறிந்து கூறு மினியென தகம்பொ னாவி
பொருளென நினைந்து நாயெ  னிடர்தீர

மணமுணர் மடந்தை மாரொ டொளிர்திரு முகங்க ளாறு
மணிகிரி யிடங்கொள் பாநு  வெயிலாசை
வரிபர வநந்த கோடி முனிவர்கள் புகழ்ந்து போத
மயில்மிசை மகிழ்ந்து நாடி  வரவேணும்

பணைமுலை யரம்பைமார்கள் குயில்கிளி யினங்கள்போல
பரிவுகொ டுகந்து வேத  மதுகூறப்
பறைமுர சநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர்
படை கட லிறந்து போக  விடும்வேலா

அணிசுக நரம்பு வீணை குயில்புற வினங்கள் போல
அமளியில் களங்க ளோசை  வளர்மாது
அரிமகள் மணங்கொ டேகி யெனதிட ரெரிந்து போக
அருணையின் விலங்கல் மேவு  பெருமாளே.

585. புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன்
பொறையி லாத கோபீகன்  முழுமூடன்
புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி
பொறிக ளோடு போய்வீழு  மதிசூதன்

நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி
நெறியி லாத வேமாளி  குலபாதன்
நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்
நினையு மாறு நீமேவி  யருள்வாயே

சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள்
சிதையு மாறு போராடி  யொருசீதை
சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு
திறமி யான மாமாயன்  மருகோனே

அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி
அமர தாடி யேதோகை  மயிலேறி
அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும்
அருணை மீதி லேமேவு  பெருமாளே.

586. போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப்
பாரியைப் பொற்குவையுச்  சிப்பொழுதிலீயும்
போதுடைப் புத்திரரைப் போலவொப் பிட்டுலகத்
தோரைமெச் சிப்பிரியப்  பட்டுமிடிபோகத்

த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித்
தாரமுட் பட்டதிருட்  டுக்கவிகள்பாடித்
தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட்
சேல்வளைப் பட்டடிமைப்  பட்டுவிடலாமோ

ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற்
றாதரிக் கைக்கருணைத்  துப்புமதில்சூழும்
ஆடகச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக்
காகவெற் றிக்கலபக்  கற்கியமர்வோனே

தோகையைப் பெற்றஇடப் பாகரொற் றைப்பகழித்
தூணிமுட் டச்சுவறத்  திக்கிலெழுபாரச்
சோதிவெற் பெட்டுமுதிர்த் தூளிதப் பட்டமிழச்
சூரனைப் பட்டுருவத்  தொட்டபெருமாளே.

587. மானை விடத்தைத் தடத்தி னிற்கயல்
மீனை நிரப்பிக் குனித்து விட்டணை
வாளி யைவட்டச் சமுத்தி ரத்தினை  வடிவேலை
வாளை வனத்துற் பலத்தி னைச்செல
மீனை விழிக்கொப் பெனப்பி டித்தவர்
மாய வலைப்பட் டிலைத் துடக்குழல்  மணநாறும்

ஊன விடத்தைச் சடக்கெ னக்கொழு
வூறு முபத்தக் கருத்த டத்தினை
யூது பிணத்தைக் குணத்ர யத்தொடு  தடுமாறும்
ஊசலை நித்தத் த்வமற்ற செத்தையு
பாதியை யொப்பித் துனிப்ப வத்தற
வோகை செலுத்திப் ப்ரமிக்கு மிப்ரமை  தெளியாதோ

சானகி கற்புத் தனைச்சு டத்தன
சோக வனத்திற் சிறைப் படுத்திய
தானை யரக்கற் குலத்த ரத்தனை  வருமாளச்
சாலை மரத்துப் புறத்தொ ளித்தடல்
வாலி யுரத்திற் சரத்தை விட்டொரு
தாரை தனைச்சுக் ரிவற்க ளித்தவன்  மருகோனே

சோனை மிகுத்துத் திரட்பு னத்தினி
லானை மதத்துக் கிடக்கு மற்புத
சோண கிரிச்சுத் தர்பெற்ற கொற்றவ  மணிநீபத்
தோள்கொடு சக்ரப் பொருப்பி னைப்பொடி
யாகநெ ருக்கிச் செருக்க ளத்தெதிர்
சூரனை வெட்டித் துணித்த டக்கிய  பெருமாளே.

588. முகத்து லக்கிக ளாசா ரவினிகள்
விலைச்சி றுக்கிகள் நேரா வசடிகள்
முழுச்ச மர்த்திகள் காமா விரகிகள்  முந்துசூது
மொழிப்ப ரத்தைகள் காசா சையில்முலை
பலர்க்கும் விற்பவர் நானா வநுபவ
முயற்று பொட்டிகள் மோகா வலமுறு  கின்றமூடர்

செகத்தி லெத்திகள் சார்வாய் மயகிகள்
திருட்டு மட்டைகள் மாயா சொருபிகள்
சிரித்து ருக்கிகள் ஆகா வெனநகை  சிந்தைமாயத்
திரட்பொ றிச்சிகள் மாபா விகளப
கடத்த சட்டைகள் மூதே விகளொடு
திளைத்த லற்றிரு சீர்பா தமுமினி  யென்றுசேர்வேன்

தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு
செகுச்செ குச்செகு சேசே செககண
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு  தொந்ததீதோ
துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு
திகுத்தி குத்திகு தீதோ எனவொரு
துவக்க நிர்த்தன மாடா வுறைபவர்  தொண்டர்பேணும்

அகத்தி யப்பனு மால்வே தனும்அறம்
வளர்த்த கற்பக மாஞா லியுமகி
ழவுற்ற நித்தபி ரானே அருணையில்  நின்றகோவே
அமர்க்க ளத்தொரு சூரே சனைவிழ
முறித்து ழக்கிய வானோர் குடிபுக
அமர்த்தி விட்டசு வாமீ அடியவர்  தம்பிரானே.

589. மேக மொத்தகுழ லார்சி லைப்புருவ
வாளி யொத்தவிழி யார்மு கக்கமல
மீது பொட்டிடழ கார்க ளத்திலணி  வடமாட
மேரு வொத்தமுலை யார்ப ளப்பளென
மார்பு துத்திபுய வார்வ ளைக்கடகம்
வீறிடத்துவளு நூலொ டொத்தஇடை  யுடைமாதர்

தோகை பக்ஷிநடை யார்ப தத்திலிடு
நூபு ரக்குரல்கள் பாட கத்துகில்கள்
சோர நற்றெருவு டேந டித்துமுலை  விலைகூறிச்
சூத கச்சரச மோடெ யெத்திவரு
வோரை நத்திவிழி யால்ம ருட்டிமயல்
தூள்ம ருத்திடுயி ரேப றிப்பவர்க  ளுறவாமோ

சேக ணச்செகண தோதி மித்திகுட
டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி
தீத கத்திமித தோவு டுக்கைமணி  முரசோதை
தேச முட்கவர ஆயி ரச்சிரமு
மூளி பட்டுமக மேரு வுக்கவுணர்
தீவு கெட்டுமுறை யோவெ னக்கதற  விடும்வேலா

ஆக மத்திபல கார ணத்தியெனை
யீண சத்தியரி ஆச னத்திசிவ
னாக முற்றசிவ காமி பத்தினியின்  முருகோனே
ஆர ணற்குமறை தேடி யிட்டதிரு
மால்ம கட்சிறுமி மோக சித்ரவளி
ஆசை பற்றிஅரு ணாச லத்தின்மகிழ்  பெருமாளே.

590. மொழிய நிறங்கறுத்து மகர வினங்கலக்கி
முடிய வளைந்தரற்று  கடலாலும்
முதிர விடம்பரப்பி வடவை முகந்தழற்குள்
முழுகி யெழுந்திருக்கு  நிலவாலும்

மழையள கந்தரித்த கொடியிடை வஞ்சியுற்ற
மயல்தணி யும்படிக்கு  நினைவாயே
மரகத துங்கவெற்றி விகட நடங்கொள்சித்ர
மயிலினில் வந்துமுத்தி  தரவேணும்

அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தி
னமுத தனம்படைத்த  திருமார்பா
அமரர் புரந்தனக்கு மழகிய செந்திலுக்கு
மருணை வளம்பதிக்கு  மிறையோனே

எழுபுவ னம்பிழைக்க அசுரர் சிரந்தெறிக்க
எழுசயி லந்தொளைத்த  சுடர்வேலா
இரவிக ளந்தரத்தர் அரியர பங்கயத்த
ரிவர்கள் பயந்தவிர்த்த  பெருமாளே.

591. வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி
வறள்சூலை குட்டமொடு  குளிர்தாகம்
மலிநீ ரிழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை
வருநீ ரடைப்பினுடன்  வெகுகோடி

சிலைநோ யடைத்தவுடல் புவிமீ தெடுத்துழல்கை
தெளியா வெனக்குமினி  முடியாதே
சிவமார் திருப்புகழை எனுநா வினிற்புகழ
சிவஞான சித்திதனை  யருள்வாயே

தொலையாத பத்தியுள திருமால் களிக்கவொரு
சுடர்வீசு சக்ரமதை  யருள்ஞான
துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு
சுகவாரி சித்தனருள்  முருகோனே

அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொ
டசுரா ரிறக்கவிடு  மழல்வேலா
அமுதா சனத்திகுற மடவாள் கரிப்பெணொடும்
அருணா சலத்திலுறை  பெருமாளே.

592. விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகல
விழிகொடு வாபோவென  வுரையாடும்
விரகுட னூறாயிர மனமுடை மாபாவிகள்
ம்ருகமத கோலாகல  முலைதோய

அடையவு மாசாபர வசமுறு கோமாளியை
அவனியு மாகாசமும்  வசைபேசும்
அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனை
அடியவ ரோடாள்வது  மொருநாளே

வடகுல போபாலர்த மொருபதி னாறாயிரம்
வனிதையர் தோள்தோய்தறா  மபிராம
மரகத நாராயணன் மருமக சோணாசல
மகிபச தாகாலமு  மிளையோனே

உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுற
உலகுய வாரார்கலி  வறிதாக
உயரிய மாநாகமு நிருதரு நீறாய்விழ
ஒருதனி வேலேவிய  பெருமாளே.

593. விதிய தாகவே பருவ மாதரார்
விரகி லேமனந்  தடுமாறி
விவர மானதொ ரறிவு மாறியே
வினைவி லேஅலைந்  திடுமூடன்

முதிய மாதமி ழிசைய தாகவே
மொழிசெய் தேநினைந்  திடுமாறு
முறைமை யாகநி னடிகள் மேவவே
முனிவு தீரவந்  தருள்வாயே

சதிய தாகிய அசுரர் மாமுடீ
தரணி மீதுகுஞ்  சமராடிச்
சகல லோகமும் வலம தாகியே
தழைய வேவருங்  குமரேசா

அதிக வானவர் கவரி வீசவே
அரிய கோபுரந்  தனில்மேவி
அருணை மீதிலெ மயிலி லேறியே
அழக தாய்வரும்  பெருமாளே.

594. விந்துப் புளகித இன்புற் றுருகிட
சிந்திக் கருவினி லுண்பச் சிறுதுளி
விரித்த கமலமெல் தரித்து ளொருசுழி
யிரத்த குளிகையொ டுதித்து வளர்மதி
விண்டுற் றருள்பதி கண்டுற் றருள்கொடு
மிண்டிச் செயலினி ரம்பித் துருவொடு
மெழுக்கி லுருவென வலித்து எழுமதி
கழித்து வயிர்குட முகுப்ப வொருபதில்
விஞ்சைச் செயல்கொடு கஞ்சச் சலவழி
வந்துப் புவிமிசை பண்டைச் செயல்கொடு
விழுப்பொ டுடல்தலை அழுக்கு மலமொடு
கவிழ்த்து விழுதழு துகுப்ப அனைவரு  மருள்கூர

மென்பற் றுருகிமு கந்திட் டனைமுலை
யுண்டித் தரகொடு வுண்கிச் சொலிவளர்
வளத்தொ டளைமல சலத்தொ டுழைகிடை
துடித்து தவழ்நடை வளர்த்தி யெனதகு
வெண்டைப் பரிபுர தண்டைச் சரவட
முங்கட் டியல்முடி பண்பித் தியல்கொடு
விதித்த முறைபடி படித்து மயல்கொள
தெருக்க ளினில்வறா கொஞ்சக் குயில்மொழி
விந்தைக் கயல்விழி கொண்டற் குழல்மதி
துண்டக் கரவளை கொஞ்சக் குயில்மொழி
விடுப்ப துதைகலை நெகிழ்த்தி மயிலென
நடித்த வர்கள்மயல் பிடித்தி டவர்வரு  வழியேபோய்ச்

சந்தித் துறவொடு பஞ்சிட் டணைமிசை
கொஞ்சிப் பலபல விஞ்சைச் சரசமொ
டணைத்து மலரிதழ் கடித்து இருகர
மடர்த்த குவிமுலை யழுத்தி யுரமிடர்
சங்குத் தொனியொடு பொங்கக் குழல்மலர்
சிந்தக் கொடியிடை தங்கிச் சுழலிட
சரத்தொ டிகள்வெயி லெறிப்ப மதிநுதல்
வியர்ப்ப பரிபுர மொலிப்ப எழுமத
சம்பத் திதுசெய லின்பத் திருள்கொடு
வம்பிற் பொருள்கள்வ ழங்கிற் றிதுபினை
சலித்து வெகுதுய ரிளைப்பொ டுடல்பிணி
பிடித்தி டனைவரும் நகைப்ப கருமயிர்  நரைமேவித்

தன்கைத் தடிகொடு குந்திக் கவியென
உந்திக் கசனம றந்திட் டுளமிக
சலித்து வுடல்சல மிகுத்து மதிசெவி
விழிப்பு மறைபட கிடத்தி மனையவள்
சம்பத் துறைமுறை யண்டைக் கொளுகையில்
சண்டக் கருநம னண்டிக் கொளுகயி
றெடுத்து விசைகொடு பிடித்து வுயிர்தனை
பதைப்ப தனிவழி யடித்து கொடுசெல
சந்தித் தவரவர் பங்குக் கழுதுஇ
ரங்கப் பிணமெடு மென்றிட் டறைபறை
தடிப்ப சுடலையி லிறக்கி விறகொடு
கொளுத்தி யொருபிடி பொடிக்கு மிலையெனு  முடலாமோ

திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி
திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
என்பத் துடிகள்த வுண்டைக் கிடுபிடி
பம்பைச் சலிகைகள் சங்கப் பறைவளை
திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு
டிடிக்கு நிகரென வுடுக்கை முரசொடு
செம்பொற் குடகுழ வுந்தப் புடன்மணி
பொங்கச் சுரர்மலர் சிந்தப் பதமிசை
செழித்த மறைசிலர் துதிப்ப முனிவர்கள்
களித்து வகைமணி முழக்க அசுரர்கள்  களமீதே

சிந்திக் குருதிக ளண்டச் சுவரகம்
ரம்பக் கிரியொடு பொங்கிப் பெருகியெ
சிவப்ப அதில்கரி மதர்த்த புரவிகள்
சிரத்தொ டிரதமு மிதப்ப நிணமொடு
செம்புட் கழுகுக ளுண்பத் தலைகள்த
தும்பக் கருடன டங்கொட் டிடகொடி
மறைப்ப நரிகண மிகுப்ப குறளிகள்
நடிக்க இருள்மலை கொளுத்தி யலைகடல்
செம்பொற் பவளமு டங்கிக் கமர்விட
வெந்திட் டிகமலை விண்டுத் துகள்பட
சிமக்கு முரகனு முழக்கி விடபட
மடைத்த சதமுடி நடுக்கி யலைபட  விடும்வேலா

தொந்தத் தொகுகுட என்பக் கழலொலி
பொங்கப் பரிபுர செம்பொற் பதமணி
சுழற்றி நடமிடு நிருத்த ரயன்முடி
கரத்த ரரிகரி யுரித்த கடவுள்மெய்
தொண்டர்க் கருள்பவர் வெந்தத் துகளணி
கங்கைப் பணிமதி கொன்றைச் சடையினர்
தொடுத்த மதனுரு பொடித்த விழியினர்
மிகுத்த புரமதை யெரித்த நகையினர்
தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர்
தொந்திக் கடவுளை தந்திட் டவரிட
சுகத்தி மழுவுழை கரத்தி மரகத
நிறத்தி முயலக பதத்தி அருளிய  முருகோனே

துண்டச் சசிநுதல் சம்பைக் கொடியிடை
ரம்பைக் கரசியெ னும்பற் றருமகள்
சுகிப்ப மணவறை களிக்க அணையறு
முகத்தொ டுறமயல் செழித்த திருபுய
செம்பொற் கரகம லம்பத் திருதல
மம்பொற் சசியெழ சந்தப் பலபடை
செறித்த கதிர்முடி கடப்ப மலர்தொடை
சிறப்பொ டொருகுடில் மருத்து வனமகள்
தொந்தப் புணர்செயல் கண்டுற் றடியெனி
டைஞ்சற் பொடிபட முன்புற் றருளயில்
தொடுத்து மிளநகை பரப்பி மயில்மிசை
நடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய  பெருமாளே.

595. வீறுபுழு கானபனி நீர்கள்பல தோயல்விடு
மேருகிரி யானகொடு  தனபார
மீதுபுர ளாபரண சோதிவித மானநகை
மேகமனு காடுகட  லிருள்மேவி

நாறுமலர் வாசமயில் நூலிடைய தேதுவள
நாணமழி வார்களுட  னுறவாடி
நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின்
ஞானசிவ மானபத  மருள்வாயே

கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரிய
கோலமயி லானபத  மருள்வோனே
கூடஅர னோடுநட மாடரிய காளியருள்
கூருசிவ காமியுமை  யருள்பாலா

ஆறுமுக மானநதி பாலகுற மாதுதன
மாரவிளை யாடிமண  மருள்வோனே
ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரிய
ஆதியரு ணாபுரியில்  பெருமாளே.

 
மேலும் திருப்புகழ் »
temple news
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி விநாயகர் துதி 1. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரிகப்பிய ... மேலும்
 
temple news
66. மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்துபூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்மூடிநெறி நீதி யே துஞ்செ யாவஞ்சி  ... மேலும்
 
temple news
177. மந்தரம தெனவேசி றந்தகும்பமுலை தனிலேபு னைந்தமஞ்சள்மண மதுவேது லங்க  வகைபேசிமன்றுகமழ் தெருவீதி ... மேலும்
 
temple news
124. தகர நறுமலர் பொதுளிய குழலியர்கலக கெருவித விழிவலை படவிதிதலையி லெழுதியு மனைவயி னுறவிடு  வதனாலேதனையர் ... மேலும்
 
temple news
242. புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல;அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே;சமரிலெதிர்த் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar