Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகான மகாலட்சுமிக்கு அழகில்லாத ... சாலை ஓர கோவிலில் முதல்வர் ஜெ., திடீர் பூஜை: குருக்களிடம் பிரசாதம் கேட்டு வாங்கினார்! சாலை ஓர கோவிலில் முதல்வர் ஜெ., திடீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயில் 2 டன் பூக்களால் அலங்கரிப்பு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 மார்
2013
10:03

பழநி: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பெங்களூருவிலிருந்து வரவழைக்கப்பட்ட 2 டன் பூக்களால், பழநி மலைக்கோயில் உட்பிரகாரம் அலங்கரிக்கப்பட்டது. பழநியில் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு, சேலம் கொங்கணாபுரத்தைச் சேர்ந்த, திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயண நித்ய புஷ்ப கைங்கர்ய சபா சார்பில், மலைக்கோயில் உட்பிரகாரம், பாரவேல் மண்டபத்தில், மஞ்சள், பிங்க், ரோஸ் போன்ற பலவண்ண ரோஜாபூக்கள், பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டது. இதற்காக பெங்களூருவிலிருந்து ஜருபுரா, அந்தோரியம், டச் ரோஜா பூக்கள், செவ்வந்திக்கள் கொண்டுவரப்பட்டன. ஏலக்காய் மாலை, மனோரஞ்சித மாலை செய்யப்பட்டு, மலைக்கோயில் உட்பிரகாரங்களில் வேல், ஓம் சரவணபவ என பூக்களால் வரையப்பட்டது. மண்டப தூண்களில் நிலைமாலைகள், பூங்கொத்துகள், பலவண்ணப் பூக்களால் ரங்கோலி அலங்காரமும் செய்யப்பட்டது.
பழநியில் திருக்கல்யாணம் தேரோட்டம்:
பழநி பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், நேற்று, நடந்தது.பங்குனி உத்திர விழா, மார்ச் 20 ல், திருஆவினன்குடி கோயிலில், கொடியேற்றத்துடன் துவங்கியது; பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் திருஆவினன்குடி எழுந்தருளி, பல வாகனங்களில் அருள்பாலித்தார். ஆறாம் நாளான நேற்று காலை, வள்ளி, தெய்வானையுடன், தந்தப்பலக்கில் சுவாமி வலம் வந்தார். சிறப்பு அலங்காரம், யாகபூஜைகள் செய்து, இரவு 8.20 மணிக்கு துலா லக்கனத்தில், திருக்கல்யாணம் நடந்தது. இரவு 8.30 மணிக்கு திருமணக்கோலத்தில் வெள்ளித்தேரில் சன்னதி, கிரி வீதிகளில் உலா வந்தார். இன்று மாலை 4.35 மணிக்கு, தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar