பதிவு செய்த நாள்
29
மார்
2013
10:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்கோயில் பூக்குழி விழா நாளை(30ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அன்று அதிகாலை, அனுக்ஞை பூஜையும் தொடர்ந்து காப்பு கட்டுதலும் நடக்கிறது. காலை 6.15 மணிக்கு மாரியம்மன்கோவில் தெரு சாலியர் சமூக பொது சாவடியிலிருந்து, கொடிப்பட்டம் புறப்பட்டு கோயிலில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழா நாட்களில் இரவில் அம்மன் சிங்கம், காம தேனு, அன்னம், தண்டியலில் புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான ஏப்., 5ல், இரவு 10 மணி அம்மன் பூ பல்லக்கில் வீதியுலா நடக்கிறது. ஏப்.,10 ல்அதிகாலை 5 மணிக்கு தீ வளர்த்தல், காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. மதியம் 1.35 மணிக்கு பூக்குழி இறங்குதல் நடக்கிறது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். ஏப்.,11 காலையில் தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் சுப்பிரமணியம், செயல் அலுவலர் சரவணன் உட்பட ஊழியர்கள் செய்து வருகின்றனர்.