சிவலிங்கத்தில் சூரிய ஒளி பாபநாசத்தில் பக்தர் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2013 10:03
பாபநாசம்: பாபநாசம் அருகே கோபுராஜபுரத்தில், ஆயிரம் ஆண்டு பழமைமிக்க சுவர்ணபுரீஸ்வரர் சொர்ணாம்பிகை (சிவன்) கோவில் உள்ளது. தற்போது உத்திராயன புண்ணிய காலம் சூரிய பூஜை மார்ச் மாதத்தில் 17தேதி முதல் 31ம் தேதி ஆகிய தேதி வரை மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை சூரியன் மிகவும் பிரகாசமாக இறைவன் சிவலிங்கம் திருமேனியில் தன் ஒளிக்கிரணங்களால் அபிஸேகம் செய்து வழிபடும் மகத்தான நிகழ்வு இக்கோயிலில் நடந்தது. சூரிய ஒளி லிங்கத் திருமேனியில் விழுந்தது. இதனால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இதை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஸேகம் நடந்தது. இக்கோவிலில் சிவலிங்கத் திருமேனியில் 21 ஒரு நாட்கள் சூரிய ஒளிபடுவது அதிசியமாக உள்ளது. கோவில் அர்ச்சகர் பாலசுப்பிரமணியன் சிவலிங்கத்திறக்கு தினந்தோறும் பூஜை செய்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் கிராம நற்பணி மன்ற ஆலோசகர் சாது சிவானந்த சுவாமிகள், டாக்டர் முருகதாஸ் உள்பட பொதுமக்களும், பக்தர்களும் சிவலிங்க திருமேனியில் சூரிய ஒளி படுவதை கண்டுபக்தி பரவசத்தில் சிவ சிவ என கோஸம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.