பண்டசோழநல்லூர் கோவிலுக்கு அறங்காவல் குழுவினர் நியமனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2013 10:03
நெட்டப்பாக்கம்:பண்டசோழநல்லூரில் உள்ள முத்தாலம்மன் கோவிலுக்கு, புதிய அறங்காவல் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் இக்கோவிலின் அறங்காவலர் குழுவினரின் பதவிக்காலம், கடந்த 16ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, 2013-2018ம் ஆண்டுகளுக்கான புதிய அறங்காவலர் குழுவின் தலைவராக பாண்டுரங்கன், உப தலைவராக ராமுலு, செயலாளராக குப்புசாமி, பொருளாளராக விஸ்வநாதன், உறுப்பினராக அம்பலவாணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.