பதிவு செய்த நாள்
30
மார்
2013
10:03
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில், திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நேற்று அதிகாலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து, திருமண அலங்காரத்தில், மூலக்கரை அருகேயுள்ள சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். மதுரை மீனாட்சிஅம்மன், சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் சந்திப்பு மண்டபத்திற்கு வந்தனர். பின், ஆறுகால் பீடத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. மாப்பிள்ளை வீட்டாராக சிவா, பெண் வீட்டாராக சண்முக சுந்தரம் சிவாச்சாரியார்கள் மாலை மாற்றிக் கொண்டனர். இரவு 8 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, பூ பல்லக்கில் தெய்வானை புறப்பாடாகி, 16 கால் மண்டபம் அருகே மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது.
சீர்வரிசை: சோலைமலை முருகன் கோயலில் இருந்து, திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பட்டாடை, மாலை, தேங்காய் பழம், பலாப்பழம், வளையல், தாலி கயிறு, பருப்பு தேங்காய், பழவகைகள் சீர்வரிசையாக கொண்டு வரப்பட்டன.
இன்று தேரேட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.