Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவிலில் ... அபிராமி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் அமைக்க முடிவு! அபிராமி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேர் இல்லாததால் பல்லக்கில் வீதி உலா: பக்தர்கள் வேதனை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஏப்
2013
10:04

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் கோவிலுக்கு சொந்தமான, திருத்தேர் சிதிலமடைந்துள்ளதால், சுவாமி உற்சவத்தில், தேரோட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. தேர் இல்லாததால், மணவாள மாமுனிகள் சுவாமி அவதார உற்சவத்தின் போது, பல்லக்கில் வீதி உலா நடத்தப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது, மிகவும் பழமையானது.

தேரோட்டம்: இக்கோவிலில், ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து, வைணவத்தை வளர்த்த ராமானுஜர், தன்னுடைய, 120வது வயதில் முக்தி அடைந்தார். அவருக்கு பின், அவர் விட்டு சென்ற சமூகப் பணியை, 80 ஆண்டுகள் மணவாள மாமுனிகள் செய்து வந்தார். ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்கு அருகில், மணவாள மாமுனிகள் சுவாமி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், பத்து நாட்கள் மணவாள மாமுனிகள் சுவாமி அவதார உற்சவம் நடைபெறும். பத்து நாள் உற்சவத்தில் ஏழாம் நாள், மணவாள மாமுனிகள் திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். அதற்காக, மணவாள மாமுனிகள் சுவாமிக்கு தனித்தேர் வடிவமைக்கப்பட்டது. இத்தேரில், மணவாள மாமுனிகள் வீதியுலா வந்தார். ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்கு சொந்தமான தேர் பழுதானபோது, மணவாளமாமுனிகள் தேர், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமிகள் வீதியுலாவிற்கு பயன்படுத்தப்பட்டது.

பழுது: பாதுகாப்பின்மை, இயற்கை இடர்பாடு உட்பட, பல்வேறு காரணங்களால் தேர் சிதிலமடைந்தது. ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு, புதிய தேர் உருவாக்கப்பட்டது. மணவாளமாமுனிகள் கோவில் தேர் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2004ம் ஆண்டிலிருந்து, மணவாள மாமுனிகள், சுவாமி கோவிலுக்கு தேர் இல்லை. இதனால், தேர் உற்சவத்தன்று, மணவாள மாமுனிகள், பல்லக்கில் வீதியுலா வருகிறார். ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்கு, ஸ்ரீபெரும்புதூரில், 250 ஏக்கர் விவசாய நிலங்கள், வீட்டு மனைகள், வீடுகள் உள்ளன. இவற்றின் மூலம் கோவிலுக்கு வருவாய் வருகிறது. இவ்வருவாய் மற்றும் பக்தர்கள் உதவியோடு, மணவாள மாமுனிகள் கோவில் தேரை சீரமைக்க, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar