திருமுருகன்பூண்டி ஆதிமுத்துமாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2013 10:04
அவிநாசி: திருமுருகன்பூண்டி ஆதிமுத்துமாரியம்மன் கோவிலில், 33வது ஆண்டு பொங்கல் குண்டம் திருவிழா நடந்தது.கடந்த மாதம் 24ம் தேதி கம்பம் நடுதலுடன் விழா துவங்கியது. படைக்கலம், அம்மை அழைத்தல், குண்டத்துக்கு பூ போடுதல், பால்குடம் எடுத்தல், திருக் கல்யாண உற்சவம் ஆகியன நடந்தன. பொங்கல் நாளன்று, கோவில் பூசாரி குமாரவேல் தலைமையில் பக்தர்கள் குண்டம் இறங்கினர். பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது.மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்; அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்பாள் புறப்பாடு நடந்தது; பக்தர்களுக்கு இரண்டு நாட்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. மஞ்சள் நீராட்டு, மறுபூஜையுடன் விழா நிறைவடைந்தது.