மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், சக்தி விநாயகர் கோயில் வளாகத்திலுள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் விழா கடந்த மாதம் 26ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. ஏப்.,2ல் அக்னி கம்பம் நடப்பட்டது. 9ல் அம்மன் அழைப்பும், 10ல் அம்மன் அலங்காரமும், சிறப்பு பூஜையும், தொடர்ந்து ஸ்ரீ சக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜையும் நடக்க உள்ளது. அன்று மாலை மாவிளக்கும், 11ம் தேதி இரவு அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. வரும் 13ம் தேதி நடூர் மாரியம்மன் கோயிலிலிருந்து திரிசூலம் எடுத்து வந்து சிவ பெருமான் படி விளையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. 14ல் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. 15ம் தேதி மாலை 4.00 மணிக்கு வெள்ளிங்கிரி மலைக்கு புறப்படுதலும், 17ல் மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ வெள்ளிங்கிரி ஆண்டவர் பக்தர்கள் திருச்சங்கத்தினர் செய்து வருகின்றனர்.