பதிவு செய்த நாள்
13
ஏப்
2013
03:04
மயிலாடுதுறை: சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோவிலில் வரும் 17ம் தேதி சிறப்பு மிக்க சைவ சம ய விழாக்களில் ஒன்றான திருமுலைப்பால் விழா நடைபெறுகிறது.
நாகை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான ஸ்ரீசட் டைநாதர் கோவிலில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீதிருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித் து வருகின்றனர். இந்த கோவிலில் திருஞானசம்பந்தருக்கு, அம்பாள் ஞானப்பால் வழங்கியதை தொடர்ந்து ஞானம் பெற்ற திருஞானசம்பந்தர் தோடுடைய செவியன் எ ன்ற முதல் தேவார பாடியது ஐதீகம். இதையொட்டி இந்த கோவிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும் பிம்மோற்சவத்தின் இரண்டாவது நாள் முக்கிய திருவிழாவாக திருமுலைப் பால் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு திருவிழா வரும் 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிற து. 17ம் தேதி பகல் 12 மணிக்கு சிறப்பு மிக்க திருமுலைப்பால் திருவிழா தரு மபுரம் ஆதினம் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாச் சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது. இவ்விழாவை தொடர்ந்து 18ம் தேதி திருஞான சம்பந்த சுவாமிகள் என்னும் சைவசித்தாந்த ஞானசூரியன் உதயஞ்செய்து வருதலைக்கண்டு சமணர்கள் ÷ தாற்றோடுதலும், 19ம் தேதி வெள்ளிரதக்காட்சியும், 20ம் தேதி சுவாமி, அம்ப õள் வெள்ளி இடப வாகனரூடராய் சகோபரத்தில் எழுந்தருளும் காட்சியும், 21ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறும். மேலும் 22ம் தேதி பிக்ஷாடணார் உற்சவமும், 24ம் தேதி திருத்தேர் பெருவி ழாவும், 26ம் தேதி மௌன உற்சவமும், 27ம் தேதி எதிர்காட்சி உற்சவமும், 28 ம் தேதி தெப்பொற்சவமும், மே 3ம் தேதி ஜ முத்துச்சட்டைநாதர் உற்சவம் எ ன தொடர்ந்து 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ திருவிழா ஏற்பாடுகளை ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோவில் சி ராப்பு செந்தில், சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.