பதிவு செய்த நாள்
15
ஏப்
2013
10:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, மழை வேண்டி, கிராம மக்கள் நூதன வழிபாடு நடத்தினர். மனித உருவ பொம்மையை, பாடையில் வைத்து, ஊர்வலமாக இழுத்துச் சென்று தீயிட்டு எரித்தனர்.தட்டுப்பாடுதமிழகத்தில், கடந்தாண்டு, வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதிகளில், நீர்நிலைகள் வறண்டு, குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.இதனால், பொள்ளாச்சி அருகேயுள்ள, நல்லூர் கிராம மக்கள், நேற்று முன்தினம், மழை வேண்டி நூதன வழிபாடு நடத்தினர்.பாடையில், மனித உருவ பொம்மையை வைத்து, அதன் மீது, விளக்கு ஏற்றினர்.கயிறு கட்டி, ஊர் முழுவதும் தெருத்தெருவாக இழுத்துச் சென்றனர். கிராம பெண்கள், விளக்கில் எண்ணெய் ஊற்றி, பாடையை சுற்றி வந்து, ஒப்பாரி வைத்து, மழை வேண்டி அழுதனர்.பின், பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். வீடுகளில், சேகரிக்கப்பட்ட எண்ணெய், அதன் மீது ஊற்றப்பட்டது. இந்த நூதன வழிபாட்டில், சுற்றுப்புற கிராம மக்கள் பங்கேற்றனர்.நம்பிக்கைநல்லூர் கிராம மக்கள் கூறியதாவது:மழை இல்லாத காலங்களில், இது போன்று, உருவ பொம்மை செய்து வழிபட்டால், மழை வரும் என்பது நம்பிக்கை. 40 ஆண்டுகளுக்கு முன், முன்னோர்கள், இது போல் வழிபட்டுள்ளனர்.வழிபாடு முடிந்த சில நாட்களிலேயே மழை பெய்தது. தற்போது, கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், இதை, மேற்கொண்டோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.