பதிவு செய்த நாள்
15
ஏப்
2013
10:04
ராமேஸ்வரம்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள், அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுத்தனர்.நேற்று, ராமேஸ்வரம் கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். பின், வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, மஹா தீபாரதனை நடந்தவுடன், பக்தருக்கு தீர்த்த வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். பின் கோயில் சுவாமி சன்னதி அருகே, தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக, கோயில் குருக்கள் உதயகுமார் பஞ்சாங்கம் வாசித்தார். கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், கோயில் பேஷ்கார் ராதா, அண்ணாத்துரை, மேலாளர் கக்காரின் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர். கோயில் மூன்றாம் பிரகாரத்தில், 108 திருவிளக்கு பூஜையும், மாலையில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.