பதிவு செய்த நாள்
16
ஏப்
2013
10:04
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, 251பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடந்தது.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு, திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் குத்துவிளக்கு பூஜை நடந்தது. திருப்போரூர் சன்னிதிமுறை, கந்தன் பெருமைகள் குறித்து, புலவர் சுப்புபெருமாள், ஜோதிடர் ஜெகநாதன் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். ஆசிரியர் அருளாளன் குழுவினர், சிறுவர்களுக்கான ஒப்புவித்தல் போட்டிகளை நடத்தினர். வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு, செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார். மாலை, 6:30 மணிக்கு, 251 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில், வளையல், குங்குமம், மஞ்சள், தாலிச்சரடு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.