பதிவு செய்த நாள்
02
மே
2013
10:05
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலத்தில், பல்லக்கில் பார்த்தசாரதி சுவாமி வீதியுலா வந்தார்.குழந்தையாக பார்த்தசாரதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில், சித்திரை பெருவிழாவின் எட்டாம் நாளான நேற்று, அதிகாலை 6:00 மணிக்கு, வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலத்தில் சுவாமி எழுந்தருளினார்.இந்த திருக்கோலத்தில், குழந்தை கண்ணனாக, கால்களை பின்னால் மடக்கி அமர்ந்த படி, ஒரு கையில் வெள்ளி செம்பும், மற்றொரு கையில் வெண்ணெயையும் வைத்திருப்பதாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். கிருஷ்ணாவதாரத்தில், ஆயர் பாடியில் குழந்தை கண்ணனாக வளர்ந்த போது, நடந்த லீலைகளை நினைவூட்டும் விதத்தில், இந்த திருக்கோல உற்சவம் நடப்பதாக வைணவ அறிஞர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து நேற்று இரவு குதிரை வாகன வீதியுலா நடந்தது.வேடுபறிஇதையொட்டி, திருமங்கையாழ்வார், திருமாலிடம் கொள்ளையடித்து சென்றதை விளக்கும் வகையில் "வேடுபறி உற்சவமும் நடைபெற்றது. குதிரை வாகனம், செப்பு தகட்டால் போர்த்தப்பட்டது. அந்த தகட்டின் மேல் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இந்த வாகனம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.