பதிவு செய்த நாள்
10
மே
2013
10:05
ஸ்ரீபெரும்புதூர்:ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், இன்று, ராமானுஜர் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார்.ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று காலை, ராமானுஜர் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.தினசரி, காலை மற்றும் மாலை நேரங்களில், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அவதார உற்சவத்தின், 6ம் நாளான இன்று காலை, வெள்ளை சாத்துபடி குதிரை வாகனத்திலும், மாலை மங்கள கிரியிலும், ராமானுஜர் வீதி உலா வருவார்.உற்சவத்தை முன்னிட்டு, வெளி மாவட்டங் களில் இருந்து, ஏராளமான பக்தர்கள், ஸ்ரீபெரும்புதூர் வந்துள்ளனர். இவர்களின் வசதிக்காக, சத்திரங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும், 13ம் தேதி, 9ம் நாள் உற்சவமான, திருத்தேர் திருவிழா நடைபெற உள்ளது.