பதிவு செய்த நாள்
16
மே
2013
10:05
சென்னை : தமிழக சுற்றுலா கழகம் மூலம், குரு ஸ்தலங்களான, தஞ்சை மாவட்டத்தில் உள்ள திட்டை மற்றும் ஆலங்குடிக்கு, சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வரும், 29ம்தேதி குருப் பெயர்ச்சியையொட்டி, சென்னையிலிருந்து, திட்டை மற்றும் ஆலங்குடிக்குடிக்கு, வரும், 28ம் தேதி சிறப்பு சுற்றுலா பஸ், இரவு, 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை,7 மணிக்கு தஞ்சை சென்றடையும். அங்கு பயணிகள் ஓய்வு மற்றும் சிற்றுண்டி முடித்துவிட்டு, காலை, 9 மணிக்கு புறப்பட்டு, திட்டைக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு, அங்கிருந்து, காலை,11 மணிக்கு ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு சென்று வழிபாடு செய்யலாம். அங்கிருந்து மதியம், 2 மணிக்கு புறப்பட்டு, இரவு, 9 மணிக்கு சென்னை வந்தடையலாம். கட்டணம், ஒரு நபருக்கு, 1,750 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன பஸ் கட்டணம், இளைப்பாருதல், சிற்றுண்டி மற்றும் வழிகாட்டி சேவையும், டிக்கெட் கட்டணத்தில் அடங்கும். மேலும் விபரங்களுக்கு, 044 25383333 என்ற தொலைபேசி எண்ணிலும், தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என, தமிழக சுற்றுலா வளர்ச்சிகழகம் தெரிவித்துள்ளது.