Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் அக்னி நட்சத்திர விழா: ... மழை வேண்டி குழவிக்கல் வெளியேற்றம் கிராம மக்களின் வினோத நம்பிக்கை! மழை வேண்டி குழவிக்கல் வெளியேற்றம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை விழா: இலையில் பக்தர்கள் அங்கபிரதட்ஷணம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 மே
2013
10:05

கரூர்: நெரூரில் நேற்று நடந்த சதாசிவ பிரமேந்திராள், 99வது ஆராதனை விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில் பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்ஷணம் நடந்தது. கரூர் மாவட்டம், நெரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சதாசிவ பிரமேந்திராள் கோவில் அருகே உள்ள அக்ரஹாரத்தில், ஆண்டு தோறும் ஆராதனை விழா நடந்து வருகிறது. நடப்பாண்டு கடந்த, 14ம் தேதி காலை, 8 மணிக்கு லட்சார்ச்சனையுடன் ஆராதனை விழா துவங்கியது. இதையடுத்து நாள்தோறும் காலை, 11 மணிக்கு நெரூர் அக்ரஹார தெருவில் இருந்து சதாசிவ பிரமேந்திராள் உருவபடம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அவரது ஜீவசமாதியில் வைத்து லட்சார்ச்சனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மஹன்யாஸ அபிஷேகம், வேதபராயணம் ஆகியவை நாள்தோறும் நடந்தது. ஆராதனையை முன்னிட்டு நேற்று காலை, 6 மணி முதல், சதாசிவ பிரமேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆராதனை உற்சவமும், லட்சார்ச்சனையும், ஸந்தர்பனையும் நடந்தது. அதைத்தொடர்ந்து சதாசிவ பிரமேந்திராள் உருவபடம் அவரது ஜீவசமாதிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சிறப்பு லட்சார்ச்சனைகள் நடந்தது.

தொடர்ந்து மதியம், 1 மணிக்கு அக்ரஹாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. பக்தர்கள் சாப்பிட்டு முடித்த இலையில், ஆண், பெண் பக்தர்கள் அங்கபிரதட்ஷணம் செய்தனர். அப்போது சதாசிவ பிரமேந்திராள் கீர்த்தனைகள் பாடப்பட்டது. ஆராதனை விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு இலையில் அன்னதானம் வழங்கும் போது, அதில் எதாவது ஒரு ருபத்தில் சதாசிவ பிரமேந்திராள் அமர்ந்து சாப்பிடுவதாகவும் ஐதீகம் உள்ளது. இதனால் பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்ஷணம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. விழாவில் கலெக்டர் ஜெயந்தி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கீதா, நெரூர் பஞ்சாயத்து தலைவர் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை விழாவையொட்டி "காலைக்கதிர் சார்பில் சிறப்பு மலர் இலவசமாக வெளியிடப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த சதாசிவ பிரமேந்திராளின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரிய தகவல்களை, ஆராதனை விழாவுக்கு வந்த பக்தர்கள் ஆர்வத்துடன் படித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar