Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமாயணம் பகுதி - 26 ராமாயணம் பகுதி - 28 ராமாயணம் பகுதி - 28
முதல் பக்கம் » இதிகாசங்கள் » ராமாயணம்
ராமாயணம் பகுதி - 27
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2013
04:06

ராமாயணம் 29

அது ஏதோ ஒரு மனிதக்குரலாக இருந்தது. ஓடிச் சென்று பார்த்தேன். ஒரு சிறுவன் அம்பு பாய்ந்த நிலையில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தான். நடந்த தவறுக்காக அவனிடம் மன்னிப்பு கேட்டேன். அறியாமல் நடந்த பிழை என்பதை அவன் தெரிந்து கொண்டான். தெரியாமல் செய்த பிழைக்கு மன்னிப்பு தேவையில்லை என பெருந்தன்மையோடு சொன்னான். கண்ணில்லாத தன் பெற்றோரை நடுக்காட்டில் விட்டு விட்டு வந்திருப்பதாகவும், அவர்களின் தாகம் தீர்க்க தண்ணீர் கொண்டு வர வந்ததாகவும் சொன்னான். உடனே ஒரு குடுவையில் தண்ணீர் கொண்டு சென்று அவர்களுக்கு தாகசாந்தி செய்யும்படியும் சொன்னான். நான் புறப்பட்டேன். அடேய் பாவி! உன் அம்பு என் மர்ம ஸ்தானத்தில் பாய்ந்திருக்கிறது. வலி பொறுக்க முடியவில்லை. இதை பிடுங்கி எறிந்து விட்டு போ, என்றான். எனக்கு தர்ம சங்கடமாகி விட்டது. அதை பிடுங்கினால் அவன் உயிர்போகும். உயிர் போனால், பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் என்ற பயம் எனக்குள் ஏற்படுவதை அவன் உணர்ந்து கொண்டான்.

தசரதா! நான் பிராமணன் இல்லை. எனவே என்னைக் கொன்றதால், உனக்கு பிரம்மஹத்தி ஏற்படாது. என் தந்தை வைசியர் குலத்தை சேர்ந்தவர். என் தாய் சூத்திர குலத்தை சேர்ந்தவள். எனவே இதுபற்றி கவலைப்படாதே, என்றதும் தசரதர் அந்த அம்பை உருவினார். அவன் வலிதாங்காமல் அலறியபடியே உயிரை விட்டான். நான் வருத்தத்துடன் அவன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றேன். சிரவணா, வந்து விட்டாயா? என்றனர் அந்தப் பெற்றோர். அவர்களின் தாகசாந்தி முதலில் தீரட்டும் என்ற நோக்கில், நான் பூனை போல பதுங்கிச் சென்று குடுவையை நீட்டினேன். என் கையை தொட்டு, அடையாளம் கண்டு கொண்ட அந்த முதியவர்கள், யார் நீ? என்றனர். நான் உண்மையைச் சொல்லிவிட்டேன். அவர்கள் அழுது புலம்பினர். கொடியவனே! நீ அறியாமல் செய்ததால் தான் இதுவரை உன் உயிர் உன் உடலில் இருக்கிறது. நீ மட்டுமல்ல. உன் இக்ஷ்வாகு குலமே பிழைத்திருக்கிறது. எங்களை அவன் இறந்து கிடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல், என்றனர். தசரதரும் அவ்வாறே செய்தார். அவனை கட்டியணைத்து அழுத பெற்றோர், ஏ தசரதா! நாங்கள் எப்படி இந்த வயதான காலத்தில் புத்திர சோகத்தால் சாகிறோமோ, அப்படியே நீயும் சாவாய், என்றனர்.

அவனுக்கு ஈமக்கிரியை செய்தனர். அந்தச் சிறுவன் கண்ணற்ற தன் பெற்றோருக்கு செய்த புண்ணியச் செயல்களின் காரணமாக, திவ்விய ரூபம் பெற்று எழுந்தான். வானத்து தேவர்களுக்குரிய அத்தனை அம்சங்களையும் பெற்றிருந்தான். தன் பெற்றோருடன் பூவுலகில் வாழாமுடியாமல் போனது பற்றி வருந்தினான். அவர்களைச் சமாதானம் செய்தான். பின்னர் தேவேந்திரன் அனுப்பிய இந்திர விமானத்தில் ஏறி இந்திரலோகம் சென்றான். (இப்போது புரிகிறதா? தாயையும், தந்தையையும் ஒருவன் ஏன் மதிக்க வேண்டும் என்பதற்கான காரணம். பெற்றோரை மதித்து நடப்பவர்களே சொர்க்கம் அடைவார்கள்) பிறகு அந்தப் பெற்றோர் கட்டைகளை அடுக்கி தீமூட்டி அதில் புகுந்து சொர்க்கத்தை அடைந்தனர்.

எனக்கு ஒரு பக்கம் வருத்தம் என்றாலும், மறுபக்கம் சந்தோஷம் ஏற்பட்டது. ஏனெனில் அப்போது எனக்கு புத்திர பிராப்தியே இல்லை. அவர்களின் சாபத்தால், எனக்கு குழந்தை பிறந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு விட்டது. அதன்படி நால்வர் பிறந்தார்கள். இன்று, அந்த சாபம் பலித்து விட்டது. புத்திர சோகத்தால் சாவு என்பதை இனியும் தவிர்க்க இயலாது. நான் இறக்கப் போகிறேன் கவுசல்யா. ராமன் இல்லாத இந்த பூமியில் என் உயிர் தங்காது, என சொல்லி விட்டு கதறி அழுதார் தசரத மகாராஜா. கவுசல்யா, என் கையைப் பிடி, என்றார். சுமித்திரையின் மடியில் தலை வைத்தார்.  நான் இறந்த பின் கைகேயி என் கிட்டே வரக்கூடாது. பரதன் என் ஈமச்சடங்கில் கலந்து கொள்ளக்கூடாது, என்றார். நள்ளிரவை நெருங்கியது நேரம். ராமா..ராமா..என முனகியவாறே உயிரை விட்டார்.

ஒரு குடும்பப் பெண் தான் கேட்பது நியாயமே என்ற போதும், தேவையற்ற பிடிவாதத்தை மேற்கொண்டால் என்ன கதியாகும் என்பதை மட்டும் ராமாயணம் கற்றுத்தரவில்லை. கைகேயி ஒரு காலத்தில் நல்லவளாகத்தானே இருந்தாள். இப்போது கணவன் இறந்து விடுவான், நாம் பொட்டின்றி, பூவின்றி நிற்கப்போகிறோம். இனி உலகம் தன்னை மதிக்காது என்று தெரிந்திருந்தும் அவள் ஏன் அப்படி நடந்து கொண்டாள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ராமாயணம் சத்திய காமத்தை வலியுறுத்துகிறது. சத்தியம் எந்த நிலையிலும் காப்பாற்றப்பட்டாக வேண்டும். உயிரைக் கொடுத்தேனும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியாக வேண்டும் என்பதை நமக்கெல்லாம் சொல்லித் தருகிறது. ஒரே வரியில் நான் அப்படி வரம் கொடுத்தாலும் கூட அதை நிறைவேற்ற வேண்டுமா? என தசரதன் கேட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. அவர் மட்டுமல்ல..எந்த மனிதனும் செய்யக்கூடாது என்பது ராமாயணம் நம் இளைய தலைமுறைக்கு கற்றுத்தரும் பாடம். இதனால் தான் ராமாயணத்தை திரும்பத் திரும்ப படிக்க வேண்டும். படித்தவற்றை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

தசரதரின் உயிர் போன பிறகும், அவர் மயங்கித்தான் கிடக்கிறாரோ என பட்டத்தரசியரும், அந்தப்புரத்து பெண்களும் நினைத்துக் கொண்டிருந்தனர். விடிந்தும் விட்டது. காலையில் அரசரை வழக்கம் போல் எழுப்பி ஸ்தோத்திரம் செய்வதற்கு சாஸ்திர நிபுணர்கள் வந்துவிட்டனர். சில பாடகர்கள் ஹரி நாராயணா, ஹரி நாராயணா என பாடினார்கள். சிலரது கையில் தங்கக்குடத்தில் தண்ணீர் போல் தோற்றமளிக்கும் ஹரிசந்தனம் இருந்தது. இந்த சந்தன தீர்த்தத்தில் தேங்காய், எள், சீரகம் சேர்க்கப்பட்டிருந்தது. பல் தேய்த்த பிறகு இந்த சந்தன தீர்த்தத்தில் தான் தசரதர் வாய் கொப்பளிப்பார். குளிப்பதற்கு முன் தேய்க்க பல வாசனைத் தைலங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. சில அந்தணர்கள் சிறந்த மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர்.இக்ஷ்வாகு குல தெய்வமான ஸ்ரீரங்கநாதப் பெருமானின் பாத தீர்த்தத்துடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். குளித்து முடித்ததும், முதலில் பருகுவது இந்த தீர்த்தத்தை தான். துளசி, விலையுயர்ந்த ஆபரணங்கள், வஸ்திரங்களுடன் சில பெண்கள் காத்திருந்தனர். இன்னும் சிலர் வெண்பட்டு சாமரங்களுடன் நின்றனர். சூரிய உதயத்திற்கு முன் மகாராஜாவை எழுப்ப தினமும் காணப்படும் காட்சி இது. ஆனால், ராஜா எழுந்து வெளியே வரவில்லை. எல்லார் மனதிலும் கவலையின் ரேகை படர்ந்தது.

 
மேலும் இதிகாசங்கள் ராமாயணம் »
temple news

ராமாயணம் பகுதி-1 நவம்பர் 08,2010

தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. ... மேலும்
 
temple news

ராமாயணம் பகுதி-2 நவம்பர் 08,2010

குழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் ... மேலும்
 
temple news

ராமாயணம் பகுதி-3 நவம்பர் 08,2010

தசரத சக்கரவர்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனார். தாயார்கள் தங்கள் செல்லக் குழந்தைகளை பார்த்து ... மேலும்
 
temple news

ராமாயணம் பகுதி-4 நவம்பர் 13,2010

தசரதரின் முன் வந்து நின்ற அந்த இளைஞன் வேறு யாருமல்ல... லட்சுமணன் தான்... தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ... மேலும்
 
temple news

ராமாயணம் பகுதி-5 நவம்பர் 13,2010

அந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar