பதிவு செய்த நாள்
08
ஜூலை
2013
10:07
குருஷேத்திரா: அரியானா மாநிலம், குருஷேத்திராவில், ஏழுமலையான் கோவில் கட்ட, நேற்று முன்தினம், பூமி பூஜை நடந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், 30 கோடி ரூபாய் செலவில் கட்டும், இந்தக் கோவிலில், 13 கோடி ரூபாயில், ஏழுமலையான் கோவிலும், மீதமுள்ள, 17 கோடிரூபாயில், அன்னதானக் கூடம், வாகன மண்டபம், பக்தர்கள் தங்கும் அறைகள் மற்றும் மடப்பள்ளி கட்டப்படும். திருமலையில் குடிகொண்டுள்ள, ஏழுமலையானின் புகழை பறைசாற்றும் விதமாக, திருமலை திருப்பதி தேவஸ்தானம், நாடு முழுவதும் ஏழுமலையான் கோவில்களை கட்டி வருகிறது. அந்த வரிசையில், குருஷேத்திரத்தில் கோவில் கட்டப்படுகிறது.